தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
அப்போஸ்தலர்கள்
1. அகிரிப்பா சின்னப்பரிடம், "இப்போது நீ உன் வழக்கை எடுத்துரைக்கலாம்" என்று சொல்ல, சின்னப்பர் கையுயர்த்தி, தன் நியாயத்தை எடுத்துச்சொல்லத் தொடங்கிக் கூறியதாவது:
2. "அகிரிப்பா மன்னர் அவர்களே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்களைக் குறித்து, தங்கள் முன்னிலையில் இன்று நான் மறுப்புக் கூறுவது எனக்குக் கிடைத்ததோர் அரிய வாய்ப்பெனக் கருதுகிறேன்.
3. ஏனெனில், யூதரின் ஒழுக்க முறைமைகளையும் சிக்கல்களையும் நீர் நன்கு அறிந்தவர். எனவே, நான் சொல்லுவதைப் பொறுமையோடு கேட்கும்படி வேண்டுகிறேன்.
4. "என் இளமை முதல் என் இனத்தாரிடை யெருசலேமிலே நான் எங்ஙனம் வாழ்ந்து வந்தேன் என்பது யூதர்கள் அனைவரும் அறிந்ததே.
5. நீண்ட காலமாகவே என்னை அவர்கள் அறிவார்கள். நம் மதத்திலுள்ள மிகக் கண்டிப்பான பிரிவினரின் முறைப்படி நான் ஒரு பரிசேயனாக வாழ்ந்தேன் என்பதும் அவர்களுக்குத் தெரியும். மனமிருந்தால், இதற்கு அவர்களே சான்று கூறலாம்.
6. நம் முன்னோருக்குக் கடவுள் அருளிய வாக்குறுதியில் நான் நம்பிக்கை வைப்பதால் தான் இப்போது தீர்ப்புக்குள்ளாயிருக்கிறேன்.
7. நம்முடைய பன்னிரு குலத்தினரும் அல்லும் பகலும் இடைவிடாது, இறைவனை வழிபட்டு, இந்த வாக்குறுதி நிறைவேறுமென்று நம்பியிருக்கின்றனர். அரசே, இந்த நம்பிக்கையின் பொருட்டு தான் யூதர்கள் என்மேல் குற்றம் சாட்டுகின்றனர்.
8. இறந்தோரைக் கடவுள் எழுப்புவது நம்பக்கூடாததொன்றென நீங்கள் எண்ணுவதேன்?
9. "நானோவெனில் நாசரேத்தூர் இயேசுவின் பெயரை மும்முரமாக எதிர்ப்பது என் கடமையெனக் கருதியிருந்தேன். அவ்வாறே யெருசலேமில் எதிர்க்கவும் செய்தேன்.
10. தலைமைக் குருவிடம் அதிகாரம் பெற்று இறை மக்கள் பலரை நானே சிறையிலடைத்தேன். அவர்களைக் கொல்லுவதற்கு நான் என் வாக்குரிமை அளித்தேன்.
11. செபக்கூடந்தோறும் சென்று பன்முறை அவர்களைத் தண்டனைக்கு ஆளாக்கினேன். அவர்கள் தேவதூஷணம் சொல்லும்படி வலுவந்தம் செய்தேன். எனது கோபவெறியில் வெளியூர்களுக்கும் போய் அவர்களைத் துன்புறுத்தினேன்.
12. "இப்படியிருக்க, தலைமைக் குருக்களிடம் அதிகாரமும் ஆணையும் பெற்று, ஒருநாள் தமஸ்கு நகருக்குச் சென்று கொண்டிருந்தேன்.
13. அப்போது, அரசே, வழியில் நண்பகலில் கதிரோனைவிட மிகுதியாய்ச் சுடர்வீசிய ஓர் ஒளியைக் கண்டேன். வானிலிருந்து தோன்றிய அது என்னையும் என்னோடு வந்தவர்களையும் சூழ்ந்து கொண்டது.
14. எல்லோரும் தரையில் விழுந்தோம். அப்போது, ' சவுலே, சவுலே, நீ என்னைத் துன்புறுத்துவதேன்? தாற்றுக்கோலை உதைப்பது உனக்குத்தான் துன்பம் ' என ஒரு குரல் எபிரேய மொழியில் சொல்லக் கேட்டேன்.
15. நானோ, ' ஆண்டவரே, நீர் யார்? ' என்றேன். அதற்கு ஆண்டவர், ' நீ துன்புறுத்தும் இயேசு தான் நான். எழுந்து நிமிர்ந்து நில்.
16. என் ஊழியனாகவும் சாட்சியாகவும் உன்னை ஏற்படுத்தவே உனக்குத் தோன்றினேன். நீ இப்பொழுது என்னைக் கண்ட இக்காட்சியைக் குறித்தும், இனி உனக்குத் தோன்றி காண்பிக்கப்போகும் காட்சிகளைக் குறித்தும் நீ சாட்சியம் பகர வேண்டும்.
17. உன் மக்களினின்றும் புறவினத்தாரினின்றும் உன்னை விடுவிப்பேன். இப்புறவினத்தாரிடமே உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களுடைய கண்களைத் திறப்பாய்.
18. அவர்கள் இருளை விட்டு ஒளிக்கு வந்து பேயின் அதிகாரத்திலிருந்து கடவுள் பக்கம் திரும்பச் செய்வாய். இவ்வாறு அவர்கள் என்னில் கொள்ளும் விசுவாசத்தால் பாவமன்னிப்புப் பெற்று, அர்ச்சிக்கப்பட்டவர்களோடு பங்கு அடைவார்கள் ' என்றார்.
19. ஆகையால் அகிரிப்பா மன்னர் அவர்களே, நான் அந்த வானகக் காட்சிக்குக் கீழ்ப்படியாமல் போகவில்லை.
20. "முதலில் தமஸ்கு மக்களிடமும், அடுத்து யெருசலேமிலும், யூதேயா நாடெங்கும் உள்ளவர்களிடமும், பின் புறவினத்தாரிடமும் போய் அவர்கள் மனம்மாறிக் கடவுளிடம் திரும்பவும், மனந்திரும்பியவர்களுக்கேற்ற செயல்களைச் செய்யவும் வேண்டுமென அறிவித்தேன்.
21. இதற்காகத்தான் கோயிலில் யூதர்கள் என்னைப் பிடித்துக் கொல்ல முயன்றார்கள்.
22. ஆனால், நானோ கடவுளின் உதவி பெற்று, சிறியோர், பெரியோர் யாவர்க்கும் இன்றுவரை சாட்சியம் கூறுபவனாயுள்ளேன்.
23. இதன்படி மெசியா பாடுபடுவாரென்றும், இறந்தோரினின்று முதலானவராய் உயிர்த்தெழுந்து, தம்மினத்தாருக்கும் புறவினத்தாருக்கும் ஒளியை அளிப்பாரென்றும், இறைவாக்கினர்களும், மோயீசனும் முன்னறிவித்ததையன்றி வேறொன்றையும் நான் கூறுவதில்லை."
24. இவ்வாறாகச் சின்னப்பர் தன் நியாயத்தை எடுத்துச் சொல்லுகையில் பெஸ்து உரத்த குரலில்: "சின்னப்பா, என்ன உளறுகிறாய்! உன்னுடைய மிகுந்த படிப்பு உன் மூளையைக் குழப்பிவிட்டது போலும்!" என்றான்.
25. அதற்குச் சின்னப்பர், "மாட்சிமை மிக்க பெஸ்து அவர்களே, நான் உளறவில்லை; தெளிந்த அறிவோடுதான் பேசுகிறேன். நான் சொல்லுவதெல்லாம் உண்மையே.
26. மேற்சொன்னதை அரசரும் அறிவார். எனவே, அவருக்கு முன்பாகத் துணிவுடன் பேசுகிறேன். இதில் எதையாவது அவர் அறியாமல் இருப்பாரென நான் நினைக்கவில்லை. ஏனெனில், இதெல்லாம் ஒரு மூலையில் நடந்ததன்று.
27. அகிரிப்பா அரசே, நீர் இறைவாக்குகளை நம்புகிறீரா? நம்புகிறீரென்று அறிவேன்" என்றார்.
28. அதைக்கேட்ட அகிரிப்பா சின்னப்பரிடம், "நீ சொல்வதை நம்பச் செய்து, சிறிது நேரத்திற்குள்ளே என்னைக் கிறிஸ்தவனாக்கி விடுவாய்போலிருக்கிறதே" என்றான்.
29. அதற்குச் சின்னப்பர், "சிறிது நேரமோ, அதிக நேரமோ, நீர் மட்டுமல்ல, நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எல்லாரும் என்னைப்போல் ஆகும்படி கடவுள் அருள் புரிவாராக. ஆனால், இந்த விலங்குகள் மட்டும் உங்களுக்கு வேண்டாம்" என்றார்.
30. பின்பு அரசனும் ஆளுநனும் பெர்னீக்கேயாளும் அவர்களோடு அமர்ந்திருந்தவர்களும் எழுந்தனர்.
31. தனியே சென்று, இவன் சாவுக்கோ சிறைத்தண்டனைக்கோ உரிய குற்றம் ஒன்றும் செய்யவில்லை எனத் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
32. அகிரிப்பா பெஸ்துவிடம் "இவ்வழக்கு செசாரிடம் செல்ல வேண்டுமன்று இவன் சொல்லாதிருந்தால் இவனை விடுதலை செய்திருக்கலாமே" என்றான்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 28 Chapters, Current Chapter 26 of Total Chapters 28
அப்போஸ்தலர்கள் 26:34
1. அகிரிப்பா சின்னப்பரிடம், "இப்போது நீ உன் வழக்கை எடுத்துரைக்கலாம்" என்று சொல்ல, சின்னப்பர் கையுயர்த்தி, தன் நியாயத்தை எடுத்துச்சொல்லத் தொடங்கிக் கூறியதாவது:
2. "அகிரிப்பா மன்னர் அவர்களே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்களைக் குறித்து, தங்கள் முன்னிலையில் இன்று நான் மறுப்புக் கூறுவது எனக்குக் கிடைத்ததோர் அரிய வாய்ப்பெனக் கருதுகிறேன்.
3. ஏனெனில், யூதரின் ஒழுக்க முறைமைகளையும் சிக்கல்களையும் நீர் நன்கு அறிந்தவர். எனவே, நான் சொல்லுவதைப் பொறுமையோடு கேட்கும்படி வேண்டுகிறேன்.
4. "என் இளமை முதல் என் இனத்தாரிடை யெருசலேமிலே நான் எங்ஙனம் வாழ்ந்து வந்தேன் என்பது யூதர்கள் அனைவரும் அறிந்ததே.
5. நீண்ட காலமாகவே என்னை அவர்கள் அறிவார்கள். நம் மதத்திலுள்ள மிகக் கண்டிப்பான பிரிவினரின் முறைப்படி நான் ஒரு பரிசேயனாக வாழ்ந்தேன் என்பதும் அவர்களுக்குத் தெரியும். மனமிருந்தால், இதற்கு அவர்களே சான்று கூறலாம்.
6. நம் முன்னோருக்குக் கடவுள் அருளிய வாக்குறுதியில் நான் நம்பிக்கை வைப்பதால் தான் இப்போது தீர்ப்புக்குள்ளாயிருக்கிறேன்.
7. நம்முடைய பன்னிரு குலத்தினரும் அல்லும் பகலும் இடைவிடாது, இறைவனை வழிபட்டு, இந்த வாக்குறுதி நிறைவேறுமென்று நம்பியிருக்கின்றனர். அரசே, இந்த நம்பிக்கையின் பொருட்டு தான் யூதர்கள் என்மேல் குற்றம் சாட்டுகின்றனர்.
8. இறந்தோரைக் கடவுள் எழுப்புவது நம்பக்கூடாததொன்றென நீங்கள் எண்ணுவதேன்?
9. "நானோவெனில் நாசரேத்தூர் இயேசுவின் பெயரை மும்முரமாக எதிர்ப்பது என் கடமையெனக் கருதியிருந்தேன். அவ்வாறே யெருசலேமில் எதிர்க்கவும் செய்தேன்.
10. தலைமைக் குருவிடம் அதிகாரம் பெற்று இறை மக்கள் பலரை நானே சிறையிலடைத்தேன். அவர்களைக் கொல்லுவதற்கு நான் என் வாக்குரிமை அளித்தேன்.
11. செபக்கூடந்தோறும் சென்று பன்முறை அவர்களைத் தண்டனைக்கு ஆளாக்கினேன். அவர்கள் தேவதூஷணம் சொல்லும்படி வலுவந்தம் செய்தேன். எனது கோபவெறியில் வெளியூர்களுக்கும் போய் அவர்களைத் துன்புறுத்தினேன்.
12. "இப்படியிருக்க, தலைமைக் குருக்களிடம் அதிகாரமும் ஆணையும் பெற்று, ஒருநாள் தமஸ்கு நகருக்குச் சென்று கொண்டிருந்தேன்.
13. அப்போது, அரசே, வழியில் நண்பகலில் கதிரோனைவிட மிகுதியாய்ச் சுடர்வீசிய ஓர் ஒளியைக் கண்டேன். வானிலிருந்து தோன்றிய அது என்னையும் என்னோடு வந்தவர்களையும் சூழ்ந்து கொண்டது.
14. எல்லோரும் தரையில் விழுந்தோம். அப்போது, ' சவுலே, சவுலே, நீ என்னைத் துன்புறுத்துவதேன்? தாற்றுக்கோலை உதைப்பது உனக்குத்தான் துன்பம் ' என ஒரு குரல் எபிரேய மொழியில் சொல்லக் கேட்டேன்.
15. நானோ, ' ஆண்டவரே, நீர் யார்? ' என்றேன். அதற்கு ஆண்டவர், ' நீ துன்புறுத்தும் இயேசு தான் நான். எழுந்து நிமிர்ந்து நில்.
16. என் ஊழியனாகவும் சாட்சியாகவும் உன்னை ஏற்படுத்தவே உனக்குத் தோன்றினேன். நீ இப்பொழுது என்னைக் கண்ட இக்காட்சியைக் குறித்தும், இனி உனக்குத் தோன்றி காண்பிக்கப்போகும் காட்சிகளைக் குறித்தும் நீ சாட்சியம் பகர வேண்டும்.
17. உன் மக்களினின்றும் புறவினத்தாரினின்றும் உன்னை விடுவிப்பேன். இப்புறவினத்தாரிடமே உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களுடைய கண்களைத் திறப்பாய்.
18. அவர்கள் இருளை விட்டு ஒளிக்கு வந்து பேயின் அதிகாரத்திலிருந்து கடவுள் பக்கம் திரும்பச் செய்வாய். இவ்வாறு அவர்கள் என்னில் கொள்ளும் விசுவாசத்தால் பாவமன்னிப்புப் பெற்று, அர்ச்சிக்கப்பட்டவர்களோடு பங்கு அடைவார்கள் ' என்றார்.
19. ஆகையால் அகிரிப்பா மன்னர் அவர்களே, நான் அந்த வானகக் காட்சிக்குக் கீழ்ப்படியாமல் போகவில்லை.
20. "முதலில் தமஸ்கு மக்களிடமும், அடுத்து யெருசலேமிலும், யூதேயா நாடெங்கும் உள்ளவர்களிடமும், பின் புறவினத்தாரிடமும் போய் அவர்கள் மனம்மாறிக் கடவுளிடம் திரும்பவும், மனந்திரும்பியவர்களுக்கேற்ற செயல்களைச் செய்யவும் வேண்டுமென அறிவித்தேன்.
21. இதற்காகத்தான் கோயிலில் யூதர்கள் என்னைப் பிடித்துக் கொல்ல முயன்றார்கள்.
22. ஆனால், நானோ கடவுளின் உதவி பெற்று, சிறியோர், பெரியோர் யாவர்க்கும் இன்றுவரை சாட்சியம் கூறுபவனாயுள்ளேன்.
23. இதன்படி மெசியா பாடுபடுவாரென்றும், இறந்தோரினின்று முதலானவராய் உயிர்த்தெழுந்து, தம்மினத்தாருக்கும் புறவினத்தாருக்கும் ஒளியை அளிப்பாரென்றும், இறைவாக்கினர்களும், மோயீசனும் முன்னறிவித்ததையன்றி வேறொன்றையும் நான் கூறுவதில்லை."
24. இவ்வாறாகச் சின்னப்பர் தன் நியாயத்தை எடுத்துச் சொல்லுகையில் பெஸ்து உரத்த குரலில்: "சின்னப்பா, என்ன உளறுகிறாய்! உன்னுடைய மிகுந்த படிப்பு உன் மூளையைக் குழப்பிவிட்டது போலும்!" என்றான்.
25. அதற்குச் சின்னப்பர், "மாட்சிமை மிக்க பெஸ்து அவர்களே, நான் உளறவில்லை; தெளிந்த அறிவோடுதான் பேசுகிறேன். நான் சொல்லுவதெல்லாம் உண்மையே.
26. மேற்சொன்னதை அரசரும் அறிவார். எனவே, அவருக்கு முன்பாகத் துணிவுடன் பேசுகிறேன். இதில் எதையாவது அவர் அறியாமல் இருப்பாரென நான் நினைக்கவில்லை. ஏனெனில், இதெல்லாம் ஒரு மூலையில் நடந்ததன்று.
27. அகிரிப்பா அரசே, நீர் இறைவாக்குகளை நம்புகிறீரா? நம்புகிறீரென்று அறிவேன்" என்றார்.
28. அதைக்கேட்ட அகிரிப்பா சின்னப்பரிடம், "நீ சொல்வதை நம்பச் செய்து, சிறிது நேரத்திற்குள்ளே என்னைக் கிறிஸ்தவனாக்கி விடுவாய்போலிருக்கிறதே" என்றான்.
29. அதற்குச் சின்னப்பர், "சிறிது நேரமோ, அதிக நேரமோ, நீர் மட்டுமல்ல, நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எல்லாரும் என்னைப்போல் ஆகும்படி கடவுள் அருள் புரிவாராக. ஆனால், இந்த விலங்குகள் மட்டும் உங்களுக்கு வேண்டாம்" என்றார்.
30. பின்பு அரசனும் ஆளுநனும் பெர்னீக்கேயாளும் அவர்களோடு அமர்ந்திருந்தவர்களும் எழுந்தனர்.
31. தனியே சென்று, இவன் சாவுக்கோ சிறைத்தண்டனைக்கோ உரிய குற்றம் ஒன்றும் செய்யவில்லை எனத் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
32. அகிரிப்பா பெஸ்துவிடம் "இவ்வழக்கு செசாரிடம் செல்ல வேண்டுமன்று இவன் சொல்லாதிருந்தால் இவனை விடுதலை செய்திருக்கலாமே" என்றான்.
Total 28 Chapters, Current Chapter 26 of Total Chapters 28
×

Alert

×

tamil Letters Keypad References