2. அப்பொழுது திடீரென, பெருங்காற்று வீசுவதுபோன்ற இரைச்சல் வானத்தினின்று உண்டாகி, அவர்கள் இருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
|
5. அச்சமயத்தில், வானத்தின்கீழ் இருக்கும் எல்லா நாட்டினின்றும் பக்தியுள்ள யூதர்கள் வந்து யெருசலேமில் தங்கியிருந்தார்கள்.
|
6. அந்த இரைச்சலைக் கேட்டு மக்கள் கூட்டமாகக் கூடினார்கள்; அவர்கள் பேசுவதை மக்கள் ஒவ்வொருவரும் தத்தம் மொழியில் கேட்டுத் திடுக்கிட்டார்கள்.
|
10. பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சீரேனே நகரை அடுத்த லீபியாவின் பகுதிகள் ஆகிய நாடுகளில் வாழ்பவரும், உரோமையிலிருந்து வந்தவர்,
|
11. யூதர், யூதமதத்தைத் தழுவியவர், - கிரேத்தர், அரபியர் ஆகிய நாம் யாவரும் நம் மொழிகளிலேயே கடவுளின் மாபெரும் செயல்களை அவர்கள் பேசக் கேட்கிறோமே!" என்றனர்.
|
12. எல்லாரும் திகைத்துப்போய், "இதைப்பற்றி என்னதான் நினைப்பது ?" என்று ஒருவர் ஒருவரிடம் சொல்லிக்கொண்டு மனங்குழம்பி நின்றனர்.
|
14. அப்பொழுது இராயப்பர் பதினொருவரோடு எழுந்துநின்று, மக்களை நோக்கி, உரத்த குரலில் பேசியதாவது: "யூதர்களே, மற்றும் யெருசலேம்வாழ் மக்களே, நான் சொல்வதை அறிந்துகொள்ளுங்கள்; என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்.
|
17. ' கடவுள் கூறுவது: இதோ! இறுதி நாட்களில் எல்லார்மேலும் என் ஆவியைப் பொழிவேன்; உங்கள் புதல்வர் புதல்வியர் இறைவாக்கு உரைப்பர், உங்கள் இளைஞர் காட்சிகள் அருளப்பெறுவர், உங்கள் முதியோர் கனவுகள் காண்பர்.
|
18. ஆம், அப்பொழுது என் அடியான், என் அடியாள் ஒவ்வொருவர்மீதும் என் ஆவியைப் பொழிவேன்; அவர்களும் இறைவாக்கு உரைப்பர்.
|
19. இன்னும், விண்ணில் அற்புதங்களும் மண்ணில் அருங்குறிகளும் காட்டுவேன்: எங்குமே இரத்தமும் நெருப்பும் புகையும்.
|
22. "இஸ்ராயேல் மக்களே, நான் கூறுவதைக் கேளுங்கள்: புதுமைகள், அற்புதங்கள், அருங்குறிகளால் நாசரேத்தூர் இயேசு கடவுளது சான்று பெற்றவராக உங்கள்முன் எண்பிக்கப்பெற்றார். ஏனெனில், நீங்கள் அறிந்திருப்பதுபோல், இவற்றையெல்லாம் உங்கள் நடுவில் கடவுளே அவர்வழியாகச் செய்தார்.
|
23. கடவுளின் திட்டத்திற்கும் முன்னறிவுக்கும் ஏற்பக் கையளிக்கப்பட்ட இவரைத்தாம், நீங்கள் திருச்சட்டம் அறியாதவர்களைக்கொண்டு சிலுவையிலறைந்து கொன்றீர்கள்.
|
24. கடவுளோ அவரை மரண வேதனைகளினின்று விடுவித்து, உயிர்த்தெழச் செய்தார்; ஏனெனில், மரணம் அவரைத் தன்பிடியில் வைத்திருத்தல் இயலாதது.
|
25. அவரைப்பற்றித் தாவீது கூறுவது: ' ஆண்டவர் என்றுமே என் கண்முன் உள்ளார்; நான் அசைவுறாதபடி அவர் என் வலப்பக்கம் நிற்கிறார்.
|
26. இதனால் என் உள்ளம் மகிழ்ந்தது, என் நாவு அக்களிப்பு எய்தியது; என் உடலும் நம்பிக்கையில் நிலைத்திருக்கும்.
|
29. "சகோதரரே, மூதாதையாகிய தாவீதைப்பற்றி ஒளிவுமறைவின்றி உங்களுக்குக் கூறலாமா: அவர் இறந்தார், அடக்கம்செய்யப்பட்டார்; அவரது கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கின்றது.
|
30. எனவே, ' அவர் பாதாளத்தில் விடப்படவில்லை ' என்றும், ' அவர் உடல் அழிவு காணவில்லை ' என்றும் அவர் கூறியது,
|
31. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்தேயாகும். ஏனெனில் தாவீது இறைவாக்கினரானதால், அவர்வழித் தோன்றல் ஒருவர் அவருடைய அரியணையில் அமர்வார் என்று கடவுள் ஆணையிட்டு உறுதியாகக் கூறியதை அவர் அறிந்திருந்தார்.
|
33. இங்ஙனம், கடவுளின் வல்லமையால் உயர்த்தப்பெற்ற இவர், வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவியைத் தந்தையிடமிருந்து பெற்று, நீங்கள் இப்பொழுது காண்பதும் கேட்பதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.
|
35. ' ஆண்டவர் என் ஆண்டவரிடம்: நாம் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் எம் வலப்பக்கத்தில் அமரும் என்றார். '
|
36. "எனவே, நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக ஆக்கினார் என்பதை இஸ்ராயேல் குலத்தவரெல்லாம் உறுதியாக அறிந்துகொள்வார்களாக."
|
37. இதைக் கேட்டு, அவர்கள் உள்ளம்குத்துண்டவர்களாய், இராயப்பரையும் மற்ற அப்போஸ்தலர்களையும் நோக்கி, "சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று வினவினார்கள்.
|
38. அதற்கு இராயப்பர், "மனந்திரும்புங்கள்; பாவமன்னிப்பு அடைவதற்காக இயேசு கிறிஸ்துவின் பெயரால் நீங்கள் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் பெறுங்கள்; அப்பொழுது பரிசுத்த ஆவியாம் திருக்கொடையைப் பெறுவீர்கள்.
|
39. ஏனெனில், இறைவன் தந்த வாக்குறுதி உங்களுக்குரியதே; ஏன், உங்கள் பிள்ளைகளுக்கும், தொலைவிலுள்ள எல்லாருக்கும், நம் கடவுளாகிய ஆண்டவர் அழைக்கும் ஒவ்வொருவருக்குமே உரியது" என்றார்.
|
40. இன்னும், அவர் பல ஆதாரங்களைக் காட்டி, சாட்சியங்கூறி, "நெறிகெட்ட இத்தலைமுறையிலிருந்து நீங்கி, உங்களை மீட்டுக்கொள்ளுங்கள்" என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
|
41. அவருடைய அறிவுரையை ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். இவ்வாறு, அன்று ஏறத்தாழ மூவாயிரம் பேர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
|
42. இவர்கள் அப்போஸ்தலர்களின் படிப்பினையைக் கேட்பதிலும், நட்புடன் உறவாடுவதிலும், அப்பம் பிட்குதலிலும், செபிப்பதிலும் நிலைத்திருந்தார்கள்.
|
43. அற்புதங்கள், அருங்குறிகள் பல அப்போஸ்தலர்கள்வழியாய் நடைபெற்றன; இதனால் மக்களிடையே அச்சம் நிலவியது.
|
44. விசுவசித்தவர்கள் எல்லாரும் ஒருமித்துத் தங்கள் உடைமைகள் அனைத்தையும் பொதுப்பொருளாய்க் கொண்டிருந்தார்கள்.
|
46. நாடோறும் தவறாமல் ஒரே மனதாய்க் கோயிலில் கூடினர்; வீடுகளில் அப்பத்தைப்பிட்டு, மனமகிழ்வோடும் கபடற்ற உள்ளத்தோடும் உணவைப் பகிர்ந்துகொண்டனர்.
|
47. இங்ஙனம் கடவுளைப் புகழ்ந்துவந்தனர்; மக்கள் அனைவருக்கும் வேண்டியவர்களாய் விளங்கினர். ஆண்டவரும் மீட்புப்பெறுவோரை நாள்தோறும் அவர்களோடு சேர்த்து வந்தார்.
|