தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
அப்போஸ்தலர்கள்
1. அந்தியோகியாவிலிருந்த சபையிலே இறைவாக்கினர்களும் போதகர்களும் இருந்தனர். அவர்கள், பர்னபா, நீகர் என்னும் சிமெயோன், சிரேனே ஊரான் லூகியு சிற்றரசன், ஏரோதுடன் வளர்ந்த மனாயீன், சவுல் என்பவராவர்.
2. ஒரு நாள் அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடுகையில் பரிசுத்த ஆவி, "சவுலையும் பர்னபாவையும் நான் தெரிந்தெடுத்த வேலைக்காக எனக்கென ஒதுக்கிவையுங்கள்" என்று அவர்களுக்குச் சென்னார்.
3. அவர்கள் நோன்பிருந்து செபம் செய்து, அவ்விருவர்மீது கைகளை விரித்து அவர்களை வழி அனுப்பினார்கள்.
4. இப்படிப் பரிசுத்த ஆவியால் அனுப்பப்பட்ட இவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றனர். அங்கிருந்து சைப்ரஸ் தீவுக்குக் கப்பல் ஏறினர்.
5. சாலமி துறையைச் சேர்ந்து யூதர்களின் செபக்கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்து வந்தனர். அருளப்பரைத் தங்களுக்குத் துணையாக அழைத்துச் சென்றனர்.
6. தீவு நெடுகப் பயணம் செய்து பாப்போ ஊர்வரை வந்தனர். அங்கே மந்திரவாதியும் போலித் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டனர். அவன் பெயர் பர்யேசு.
7. அவன் செர்குயுபவுலு என்ற ஆளுநனின் பரிவாரத்தில் ஒருவன். நல்லறிவுபடைத்த அவ்வாளுநன் பர்னபாவையும் சவுலையும் வரவழைத்து, கடவுளின் வார்த்தையைக் கேட்க ஆவலாயிருந்தான்.
8. ஆனால், எலிமா என்னும் அந்த மந்திரவாதி அவர்களை எதிர்த்து, ஆளுநன் விசுவசிப்பதைத் தடுக்க முயற்சி செய்தான். ( எலிமா என்பதற்கு மந்திரவாதி என்பதுதான் பொருள். )
9. அப்போது சின்னப்பர் என்னும் சவுல் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று அவனை உற்று நோக்கி,
10. "சூழ்ச்சியும் வஞ்சகமுமே உருவானவனே! அலகையின் வழிவந்தவனே! நன்மையானதற்கெல்லாம் பகைவனே! ஆண்டவரின் நேர்மையான வழியைப் புரட்டுவதை விட்டுவிடமாட்டாயா
11. இதோ! ஆண்டவரின் கை உன்மேல் ஓங்கியிருக்கிறது. நீ ஒளியைக் காணாது கொஞ்சகாலம் குருடனாயிருப்பாய்" என்றார். என்றதும் அவனுக்குப் பார்வை மங்கிற்று. இருள் அவனைச் சூழ்ந்தது. அவன் அங்குமிங்கும் தடவி, தனக்கு வழிகாட்ட ஓர் ஆள் தேடலானான்.
12. நடந்ததைக் கண்ட ஆளுநன் விசுவசித்தான். ஆண்டவரின் போதனையைக் கேட்டு மலைத்துப்போனான்.
13. சின்னப்பரும் அவருடன் இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பல் ஏறி பம்பிலியாவிலுள்ள பெர்கே துறையை அடைந்தனர். அருளப்பர் அவர்களை விட்டுப் பிரிந்து யெருசலேமிற்குத் திரும்பினார்.
14. பெர்கேயிலிருந்து பயணத்தைத் தொடர்ந்து பிசிதியா நாட்டு அந்தியோகியா வந்தனர்.
15. ஓய்வுநாளில் செபக்கூடத்திற்குப் போய் அமர்ந்தனர். திருச்சட்டமும் இறைவாக்குகளும் வாசித்து முடிந்தபின், செபக்கூடத் தலைவர்கள் அவர்களைப் பார்த்து, "சகோதரரே, மக்களுக்கு அறிவுரை கூற ஏதாவது இருந்தால் பேசலாம்" என்றனர்.
16. சவுல் எழுந்து சைகை காட்டி உரைத்ததாவது: "இஸ்ராயேலரே, கடவுளுக்கு அஞ்சுபவரே, கேளுங்கள்:
17. இஸ்ராயேலராகிய இம்மக்களின் கடவுள் நம் முன்னோரைத் தெரிந்தெடுத்தார். நம் மக்கள் எகிப்து நாட்டில் குடியேறியபோது அவர்களை மேன்மைப்படுத்தினார். ஓங்கிய தம் கை வன்மையால் அவர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றி,
18. பாலை நிலத்தில் நாற்பது ஆண்டளவாய், அவர்கள் போன போக்கையெல்லாம் சகித்து வந்தார்.
19. பின்னர், கானான் நாட்டில் ஏழு இனத்தினரை ஒழித்து அவர்களுடைய நாடுகளை இவர்களுக்கு உரிமையாக்கினார்.
20. இவையெல்லாம் நடைபெற ஏறக்குறைய நானூற்று ஐம்பது ஆண்டுகளாயின. அதன்பின், இறைவாக்கினரான சாமுவேல் வரை அவர்களுக்கு நடுவர்களை அனுப்பினார்.
21. பின்னர் அவர்கள் ஓர் அரசனை ஏற்படுத்துமாறு வேண்டவே, கீஸ் என்பவனின் மகன் சவுலைக் கடவுள் அரசனாக ஏற்படுத்தினார். அவன் பென்யமீன் குலத்தினன்; நாற்பது ஆண்டுகள் ஆண்டான்.
22. பிறகு கடவுள் அவனை நீக்கிவிட்டு, தாவீதை அவர்களுக்கு அரசனாக ஏற்படுத்தினார். அவரைப்பற்றிக் கடவுள், ' யீசாயின் மகன் தாவீது என் மனத்துக்கு உகந்தவனாய் இருக்கக் கண்டேன். நான் விரும்பியதெல்லாம் அவன் செய்வான் ' என்று நற்சான்று கூறினார்.
23. அவரது மரபிலிருந்தே கடவுள் தாம் வாக்களித்தபடி இயேசுவை இஸ்ராயேலருக்கு மீட்பராக வரச்செய்தார்.
24. இயேசுவின் வருகைக்குமுன், அருளப்பர் இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும், மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று அறிவித்து வந்தார்.
25. தம் பணி முடிவுறும் காலத்தில் அருளப்பர், ' நீங்கள் என்னை யாரென நினைக்கிறீர்களோ, அவரல்ல நான். இதோ! ஒருவர் எனக்குப்பின் வருகின்றார். அவருடைய மிதியடிகளை அவிழ்க்க நான் தகுதியற்றவன் ' என்றார்.
26. "சகோதரரே, ஆபிரகாம் வழி வந்தவர்களே, மற்றும் கடவுளுக்கு அஞ்சுபவர்களே, நமக்கன்றோ இந்த மீட்பைப் பற்றிய செய்தி அனுப்பப்பட்டது.
27. யெருசலேம் வாசிகளும், அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறிந்துகொள்ளவில்லை. ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளையும் புரிந்து கொள்ளவில்லை. ஆயினும் அவருக்குத் தீர்ப்பளித்தபோது அவ்வாக்கியங்களை நிறைவேற்றினர்.
28. சாவுக்குரிய குற்றம் எதுவும் காணாதிருந்தும் அவரைத் தொலைக்குமாறு பிலாத்துவைக் கேட்டனர்.
29. அவரைக் குறித்து எழுதப்பட்டவை அனைத்தும் நிறைவேறிய பின்னர் அவரைக் கழுமரத்திலிருந்து இறக்கி, கல்லறையில் வைத்தனர்.
30. கடவுளோ அவரை இறந்தோரிடமிருந்து எழுப்பினார்.
31. அவரும் கலிலேயாவிலிருந்து தம்முடன் யெருசலேம் வந்திருந்தவர்களுக்குப் பல நாட்கள் தோன்றினார். அவர்கள் இப்போது மக்கள்முன் அவருக்குச் சாட்சியாக நிற்கின்றனர்.
32. "நாங்களும் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தியாவது:
33. இயேசுவைக் கடவுள் உயிர்ப்பித்து, நம் முன்னோருக்கு அளித்த வாக்குறுதியை அவர்களுடைய மக்களாகிய நமக்கென நிறைவேற்றினார். அதைப்பற்றியே இரண்டாம் சங்கீதத்தில், ' நீர் எம் புதல்வர், இன்று உம்மை யாம் ஈன்றெடுத்தோம் ' என்று எழுதியுள்ளது.
34. மேலும், அவர் என்றுமே அழிவுக்கு ஆளாகாதபடி, இறந்தோரிடமிருந்து அவரை எழுப்பினார் என்பதைப் பற்றித்தான், ' தாவீதுக்குக் கூறிய தவறாத வாக்குறுதிகளை உங்களுக்கென நிறைவேற்றுவேன் ' என்று உரைத்தபோது கூறினார்.
35. எப்படியெனில் மற்றோரிடத்தில், ' உம்முடைய பரிசுத்தர் அழிவுற விடமாட்டீர் ' என்றுள்ளது.
36. ஆனால், தாவீது தம் தலைமுறையில் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றியபின் இறந்தார்.
37. தம் முன்னோர்களுடன் புதைக்கப்பட்டு அழிவுற்றார். ஆனால் யாரைக் கடவுள் எழுப்பினாரோ, அவர் அழிவுறவில்லை. "எனவே, சகோதரரே, இவர் வழியாகவே பாவமன்னிப்பு உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
38. இதைத் தெரிந்துகொள்ளுங்கள். மோயீசன் சட்டத்தின் வழியாக உங்கள் குற்றங்கள் எவற்றினின்றும் நீங்கள் விடுபடமுடியவில்லை.
39. ஆனால், விசுவசிக்கிற அனைவரும் இவர்வழியாக அவற்றினின்று விடுபடுவர்.
40. ஆகவே, இகழ்பவரே, பாருங்கள், வியப்புறுங்கள், ஒழிந்துபோங்கள். ஏனெனில்,
41. உங்கள் வாழ்நாளில் நான் ஒன்று செய்வேன். யார் சொன்னாலும் அதை நம்பமாட்டீர்கள் ' என்று இறைவாக்குகளின் நூலில் கூறியுள்ளது உங்களுக்கு நேராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
42. அவர்கள் வெளியே செல்லுகையில் அடுத்த ஓய்வுநாளில் அதைப்பற்றியே பேசும்படி மக்கள் அவர்களைக் கேட்டுக் கொண்டனர்.
43. கூட்டம் கலைந்த பின்னர் யூதர் பலரும், யூதமறையைத் தழுவிய புறவினத்தவர் பலரும் சின்னப்பரையும் பர்னபாவையும் பின் தொடர்ந்தனர். இவ்விருவரும் அவர்களுடன் உரையாடி, கடவுளுடைய அருளில் நிலையாயிருக்கும்படி ஊக்குவித்தனர்.
44. அடுத்த ஓய்வுநாளில் கடவுளின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் வந்து கூடினர்.
45. இக்கூட்டத்தைக் கண்டு, யூதர்கள் பொறாமை நிறைந்தவர்களாய்ச் சின்னப்பரைத் தூற்றி, அவர் சொன்னதை மறுத்துப் பேசினர்.
46. சின்னப்பரும் பர்னபாவும் துணிவோடு, "முதலில் உங்களுக்குத்தான் கடவுளின் வார்த்தையைப் போதிக்கவேண்டியிருந்தது. ஆனால், நீங்கள் அதைப் புறக்கணித்து, முடிவில்லா வாழ்விற்குத் தகுதியற்றவர்கள் என நீங்களே உங்களுக்குத் தீர்ப்பிட்டுக் கொண்டீர்கள். ஆதலால், இதோ, நாங்கள் உங்களைவிட்டு, 'புறவினத்தார்பால் செல்கிறோம்.
47. ஏனெனில், ' உலகின் இறுதி எல்லைவரைக்கும் மீட்பைக் கொண்டு செல்ல புறவினத்தாருக்கு ஒளியாக உன்னை ஏற்படுத்தினேன் ' என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்" என்றனர்.
48. புறவினத்தார் இதைக் கேட்டு மகிழ்ந்து ஆண்டவரின் வார்த்தையை மகிமைப்படுத்தினர். முடிவில்லா வாழ்வுக்குக் குறிக்கப்பட்டவர்கள் அனைவரும் விசுவாசிகள் ஆயினர்.
49. ஆண்டவரின் வார்த்தை அந்நாடெங்கும் பரவிவந்தது.
50. யூதர்களோ யூதமறையைத் தழுவிய பெருங்குடிப் பெண்டிரையும் நகரப் பெரியோர்களையும் தூண்டினர். சின்னப்பருக்கும் பர்னபாவுக்கும் எதிராகக் கலகம் உண்டாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து வெளியேற்றினர்.
51. இவர்கள் தம் காலிலிருந்து தூசியை அவர்களுக்கு எதிராகத் தட்டிவிட்டு இக்கோனியாவுக்குப் போயினர்.
52. சீடர்களோ மகிழ்ச்சியாலும் பரிசுத்த ஆவியாலும் நிரம்பியவராய் வாழ்ந்தனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 28 Chapters, Current Chapter 13 of Total Chapters 28
அப்போஸ்தலர்கள் 13:19
1. அந்தியோகியாவிலிருந்த சபையிலே இறைவாக்கினர்களும் போதகர்களும் இருந்தனர். அவர்கள், பர்னபா, நீகர் என்னும் சிமெயோன், சிரேனே ஊரான் லூகியு சிற்றரசன், ஏரோதுடன் வளர்ந்த மனாயீன், சவுல் என்பவராவர்.
2. ஒரு நாள் அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடுகையில் பரிசுத்த ஆவி, "சவுலையும் பர்னபாவையும் நான் தெரிந்தெடுத்த வேலைக்காக எனக்கென ஒதுக்கிவையுங்கள்" என்று அவர்களுக்குச் சென்னார்.
3. அவர்கள் நோன்பிருந்து செபம் செய்து, அவ்விருவர்மீது கைகளை விரித்து அவர்களை வழி அனுப்பினார்கள்.
4. இப்படிப் பரிசுத்த ஆவியால் அனுப்பப்பட்ட இவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றனர். அங்கிருந்து சைப்ரஸ் தீவுக்குக் கப்பல் ஏறினர்.
5. சாலமி துறையைச் சேர்ந்து யூதர்களின் செபக்கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்து வந்தனர். அருளப்பரைத் தங்களுக்குத் துணையாக அழைத்துச் சென்றனர்.
6. தீவு நெடுகப் பயணம் செய்து பாப்போ ஊர்வரை வந்தனர். அங்கே மந்திரவாதியும் போலித் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டனர். அவன் பெயர் பர்யேசு.
7. அவன் செர்குயுபவுலு என்ற ஆளுநனின் பரிவாரத்தில் ஒருவன். நல்லறிவுபடைத்த அவ்வாளுநன் பர்னபாவையும் சவுலையும் வரவழைத்து, கடவுளின் வார்த்தையைக் கேட்க ஆவலாயிருந்தான்.
8. ஆனால், எலிமா என்னும் அந்த மந்திரவாதி அவர்களை எதிர்த்து, ஆளுநன் விசுவசிப்பதைத் தடுக்க முயற்சி செய்தான். ( எலிமா என்பதற்கு மந்திரவாதி என்பதுதான் பொருள். )
9. அப்போது சின்னப்பர் என்னும் சவுல் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று அவனை உற்று நோக்கி,
10. "சூழ்ச்சியும் வஞ்சகமுமே உருவானவனே! அலகையின் வழிவந்தவனே! நன்மையானதற்கெல்லாம் பகைவனே! ஆண்டவரின் நேர்மையான வழியைப் புரட்டுவதை விட்டுவிடமாட்டாயா
11. இதோ! ஆண்டவரின் கை உன்மேல் ஓங்கியிருக்கிறது. நீ ஒளியைக் காணாது கொஞ்சகாலம் குருடனாயிருப்பாய்" என்றார். என்றதும் அவனுக்குப் பார்வை மங்கிற்று. இருள் அவனைச் சூழ்ந்தது. அவன் அங்குமிங்கும் தடவி, தனக்கு வழிகாட்ட ஓர் ஆள் தேடலானான்.
12. நடந்ததைக் கண்ட ஆளுநன் விசுவசித்தான். ஆண்டவரின் போதனையைக் கேட்டு மலைத்துப்போனான்.
13. சின்னப்பரும் அவருடன் இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பல் ஏறி பம்பிலியாவிலுள்ள பெர்கே துறையை அடைந்தனர். அருளப்பர் அவர்களை விட்டுப் பிரிந்து யெருசலேமிற்குத் திரும்பினார்.
14. பெர்கேயிலிருந்து பயணத்தைத் தொடர்ந்து பிசிதியா நாட்டு அந்தியோகியா வந்தனர்.
15. ஓய்வுநாளில் செபக்கூடத்திற்குப் போய் அமர்ந்தனர். திருச்சட்டமும் இறைவாக்குகளும் வாசித்து முடிந்தபின், செபக்கூடத் தலைவர்கள் அவர்களைப் பார்த்து, "சகோதரரே, மக்களுக்கு அறிவுரை கூற ஏதாவது இருந்தால் பேசலாம்" என்றனர்.
16. சவுல் எழுந்து சைகை காட்டி உரைத்ததாவது: "இஸ்ராயேலரே, கடவுளுக்கு அஞ்சுபவரே, கேளுங்கள்:
17. இஸ்ராயேலராகிய இம்மக்களின் கடவுள் நம் முன்னோரைத் தெரிந்தெடுத்தார். நம் மக்கள் எகிப்து நாட்டில் குடியேறியபோது அவர்களை மேன்மைப்படுத்தினார். ஓங்கிய தம் கை வன்மையால் அவர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றி,
18. பாலை நிலத்தில் நாற்பது ஆண்டளவாய், அவர்கள் போன போக்கையெல்லாம் சகித்து வந்தார்.
19. பின்னர், கானான் நாட்டில் ஏழு இனத்தினரை ஒழித்து அவர்களுடைய நாடுகளை இவர்களுக்கு உரிமையாக்கினார்.
20. இவையெல்லாம் நடைபெற ஏறக்குறைய நானூற்று ஐம்பது ஆண்டுகளாயின. அதன்பின், இறைவாக்கினரான சாமுவேல் வரை அவர்களுக்கு நடுவர்களை அனுப்பினார்.
21. பின்னர் அவர்கள் ஓர் அரசனை ஏற்படுத்துமாறு வேண்டவே, கீஸ் என்பவனின் மகன் சவுலைக் கடவுள் அரசனாக ஏற்படுத்தினார். அவன் பென்யமீன் குலத்தினன்; நாற்பது ஆண்டுகள் ஆண்டான்.
22. பிறகு கடவுள் அவனை நீக்கிவிட்டு, தாவீதை அவர்களுக்கு அரசனாக ஏற்படுத்தினார். அவரைப்பற்றிக் கடவுள், ' யீசாயின் மகன் தாவீது என் மனத்துக்கு உகந்தவனாய் இருக்கக் கண்டேன். நான் விரும்பியதெல்லாம் அவன் செய்வான் ' என்று நற்சான்று கூறினார்.
23. அவரது மரபிலிருந்தே கடவுள் தாம் வாக்களித்தபடி இயேசுவை இஸ்ராயேலருக்கு மீட்பராக வரச்செய்தார்.
24. இயேசுவின் வருகைக்குமுன், அருளப்பர் இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும், மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று அறிவித்து வந்தார்.
25. தம் பணி முடிவுறும் காலத்தில் அருளப்பர், ' நீங்கள் என்னை யாரென நினைக்கிறீர்களோ, அவரல்ல நான். இதோ! ஒருவர் எனக்குப்பின் வருகின்றார். அவருடைய மிதியடிகளை அவிழ்க்க நான் தகுதியற்றவன் ' என்றார்.
26. "சகோதரரே, ஆபிரகாம் வழி வந்தவர்களே, மற்றும் கடவுளுக்கு அஞ்சுபவர்களே, நமக்கன்றோ இந்த மீட்பைப் பற்றிய செய்தி அனுப்பப்பட்டது.
27. யெருசலேம் வாசிகளும், அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறிந்துகொள்ளவில்லை. ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளையும் புரிந்து கொள்ளவில்லை. ஆயினும் அவருக்குத் தீர்ப்பளித்தபோது அவ்வாக்கியங்களை நிறைவேற்றினர்.
28. சாவுக்குரிய குற்றம் எதுவும் காணாதிருந்தும் அவரைத் தொலைக்குமாறு பிலாத்துவைக் கேட்டனர்.
29. அவரைக் குறித்து எழுதப்பட்டவை அனைத்தும் நிறைவேறிய பின்னர் அவரைக் கழுமரத்திலிருந்து இறக்கி, கல்லறையில் வைத்தனர்.
30. கடவுளோ அவரை இறந்தோரிடமிருந்து எழுப்பினார்.
31. அவரும் கலிலேயாவிலிருந்து தம்முடன் யெருசலேம் வந்திருந்தவர்களுக்குப் பல நாட்கள் தோன்றினார். அவர்கள் இப்போது மக்கள்முன் அவருக்குச் சாட்சியாக நிற்கின்றனர்.
32. "நாங்களும் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தியாவது:
33. இயேசுவைக் கடவுள் உயிர்ப்பித்து, நம் முன்னோருக்கு அளித்த வாக்குறுதியை அவர்களுடைய மக்களாகிய நமக்கென நிறைவேற்றினார். அதைப்பற்றியே இரண்டாம் சங்கீதத்தில், ' நீர் எம் புதல்வர், இன்று உம்மை யாம் ஈன்றெடுத்தோம் ' என்று எழுதியுள்ளது.
34. மேலும், அவர் என்றுமே அழிவுக்கு ஆளாகாதபடி, இறந்தோரிடமிருந்து அவரை எழுப்பினார் என்பதைப் பற்றித்தான், ' தாவீதுக்குக் கூறிய தவறாத வாக்குறுதிகளை உங்களுக்கென நிறைவேற்றுவேன் ' என்று உரைத்தபோது கூறினார்.
35. எப்படியெனில் மற்றோரிடத்தில், ' உம்முடைய பரிசுத்தர் அழிவுற விடமாட்டீர் ' என்றுள்ளது.
36. ஆனால், தாவீது தம் தலைமுறையில் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றியபின் இறந்தார்.
37. தம் முன்னோர்களுடன் புதைக்கப்பட்டு அழிவுற்றார். ஆனால் யாரைக் கடவுள் எழுப்பினாரோ, அவர் அழிவுறவில்லை. "எனவே, சகோதரரே, இவர் வழியாகவே பாவமன்னிப்பு உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
38. இதைத் தெரிந்துகொள்ளுங்கள். மோயீசன் சட்டத்தின் வழியாக உங்கள் குற்றங்கள் எவற்றினின்றும் நீங்கள் விடுபடமுடியவில்லை.
39. ஆனால், விசுவசிக்கிற அனைவரும் இவர்வழியாக அவற்றினின்று விடுபடுவர்.
40. ஆகவே, இகழ்பவரே, பாருங்கள், வியப்புறுங்கள், ஒழிந்துபோங்கள். ஏனெனில்,
41. உங்கள் வாழ்நாளில் நான் ஒன்று செய்வேன். யார் சொன்னாலும் அதை நம்பமாட்டீர்கள் ' என்று இறைவாக்குகளின் நூலில் கூறியுள்ளது உங்களுக்கு நேராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
42. அவர்கள் வெளியே செல்லுகையில் அடுத்த ஓய்வுநாளில் அதைப்பற்றியே பேசும்படி மக்கள் அவர்களைக் கேட்டுக் கொண்டனர்.
43. கூட்டம் கலைந்த பின்னர் யூதர் பலரும், யூதமறையைத் தழுவிய புறவினத்தவர் பலரும் சின்னப்பரையும் பர்னபாவையும் பின் தொடர்ந்தனர். இவ்விருவரும் அவர்களுடன் உரையாடி, கடவுளுடைய அருளில் நிலையாயிருக்கும்படி ஊக்குவித்தனர்.
44. அடுத்த ஓய்வுநாளில் கடவுளின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் வந்து கூடினர்.
45. இக்கூட்டத்தைக் கண்டு, யூதர்கள் பொறாமை நிறைந்தவர்களாய்ச் சின்னப்பரைத் தூற்றி, அவர் சொன்னதை மறுத்துப் பேசினர்.
46. சின்னப்பரும் பர்னபாவும் துணிவோடு, "முதலில் உங்களுக்குத்தான் கடவுளின் வார்த்தையைப் போதிக்கவேண்டியிருந்தது. ஆனால், நீங்கள் அதைப் புறக்கணித்து, முடிவில்லா வாழ்விற்குத் தகுதியற்றவர்கள் என நீங்களே உங்களுக்குத் தீர்ப்பிட்டுக் கொண்டீர்கள். ஆதலால், இதோ, நாங்கள் உங்களைவிட்டு, 'புறவினத்தார்பால் செல்கிறோம்.
47. ஏனெனில், ' உலகின் இறுதி எல்லைவரைக்கும் மீட்பைக் கொண்டு செல்ல புறவினத்தாருக்கு ஒளியாக உன்னை ஏற்படுத்தினேன் ' என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்" என்றனர்.
48. புறவினத்தார் இதைக் கேட்டு மகிழ்ந்து ஆண்டவரின் வார்த்தையை மகிமைப்படுத்தினர். முடிவில்லா வாழ்வுக்குக் குறிக்கப்பட்டவர்கள் அனைவரும் விசுவாசிகள் ஆயினர்.
49. ஆண்டவரின் வார்த்தை அந்நாடெங்கும் பரவிவந்தது.
50. யூதர்களோ யூதமறையைத் தழுவிய பெருங்குடிப் பெண்டிரையும் நகரப் பெரியோர்களையும் தூண்டினர். சின்னப்பருக்கும் பர்னபாவுக்கும் எதிராகக் கலகம் உண்டாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து வெளியேற்றினர்.
51. இவர்கள் தம் காலிலிருந்து தூசியை அவர்களுக்கு எதிராகத் தட்டிவிட்டு இக்கோனியாவுக்குப் போயினர்.
52. சீடர்களோ மகிழ்ச்சியாலும் பரிசுத்த ஆவியாலும் நிரம்பியவராய் வாழ்ந்தனர்.
Total 28 Chapters, Current Chapter 13 of Total Chapters 28
×

Alert

×

tamil Letters Keypad References