தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன் [QBR] சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். [QBR]
2. நான் யெகோவாவை நோக்கி: [QBR] நீர் என்னுடைய அடைக்கலம், [QBR] என்னுடைய கோட்டை, என் தேவன், [QBR] நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். [QBR]
3. அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், [QBR] பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். [QBR]
4. அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; [QBR] அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; [QBR] அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும். [QBR]
5. இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும், [QBR]
6. இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், [QBR] மத்தியானத்தில் பாழாக்கும் வியாதிகளுக்கும் பயப்படாமல் இருப்பாய். [QBR]
7. உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும், [QBR] உன்னுடைய வலதுபுறத்தில் பத்தாயிரம்பேரும் விழுந்தாலும், [QBR] அது உன்னை அணுகாது. [QBR]
8. உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய். [QBR]
9. எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை [QBR] உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய். [QBR]
10. ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, [QBR] வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது. [QBR]
11. உன்னுடைய வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, [QBR] உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். [QBR]
12. உன்னுடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு [QBR] அவர்கள் உன்னைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள். [QBR]
13. சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, [QBR] பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய். [QBR]
14. அவன் என்னிடத்தில் வாஞ்சையாக இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; [QBR] என்னுடைய பெயரை அவன் அறிந்திருக்கிறபடியால் [QBR] அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். [QBR]
15. அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், [QBR] நான் அவனுக்கு மறுஉத்திரவு அருளிச்செய்வேன்; [QBR] ஆபத்தில் நானே அவனோடு இருந்து, அவனைத் தப்புவித்து, [QBR] அவனைக் கனப்படுத்துவேன். [QBR]
16. நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, [QBR] என்னுடைய இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 91 of Total Chapters 150
சங்கீதம் 91:39
1. உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன்
சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
2. நான் யெகோவாவை நோக்கி:
நீர் என்னுடைய அடைக்கலம்,
என்னுடைய கோட்டை, என் தேவன்,
நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
3. அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும்,
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்.
4. அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்;
அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்;
அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும்.
5. இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும்,
6. இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்,
மத்தியானத்தில் பாழாக்கும் வியாதிகளுக்கும் பயப்படாமல் இருப்பாய்.
7. உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும்,
உன்னுடைய வலதுபுறத்தில் பத்தாயிரம்பேரும் விழுந்தாலும்,
அது உன்னை அணுகாது.
8. உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய்.
9. எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை
உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய்.
10. ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது,
வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது.
11. உன்னுடைய வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,
உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
12. உன்னுடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு
அவர்கள் உன்னைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.
13. சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து,
பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.
14. அவன் என்னிடத்தில் வாஞ்சையாக இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்;
என்னுடைய பெயரை அவன் அறிந்திருக்கிறபடியால்
அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
15. அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான்,
நான் அவனுக்கு மறுஉத்திரவு அருளிச்செய்வேன்;
ஆபத்தில் நானே அவனோடு இருந்து, அவனைத் தப்புவித்து,
அவனைக் கனப்படுத்துவேன்.
16. நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி,
என்னுடைய இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன். PE
Total 150 Chapters, Current Chapter 91 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References