தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், [QBR] என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், [QBR] அவர் எனக்குச் செவிகொடுத்தார். [QBR]
2. என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; [QBR] இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; [QBR] என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது. [QBR]
3. நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; [QBR] நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா) [QBR]
4. நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; [QBR] நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன். [QBR]
5. ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன். [QBR]
6. இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து, [QBR] என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்; [QBR] என் ஆவி ஆராய்ச்சிசெய்தது. [QBR]
7. ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ? [QBR] இனி ஒருபோதும் தயை செய்யாமலிருப்பாரோ? [QBR]
8. அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ? [QBR] வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோனதோ? [QBR]
9. தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? [QBR] கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா) [QBR]
10. அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்; [QBR] ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருடங்களை நினைவுகூருவேன். [QBR]
11. யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன், [QBR] உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; [QBR]
12. உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, [QBR] உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன். [QBR]
13. தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; [QBR] நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்? [QBR]
14. அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; [QBR] மக்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கச்செய்தீர். [QBR]
15. யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை, [QBR] உமது வல்லமையினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா) [QBR]
16. தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே, [QBR] தண்ணீர்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; [QBR] ஆழங்களும் கலங்கினது. [QBR]
17. மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது; [QBR] ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; [QBR] உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது. [QBR]
18. உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; [QBR] மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது. [QBR]
19. உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; [QBR] உமது காலடிகள் தெரியப்படாமல்போனது. [QBR]
20. மோசே ஆரோன் என்பவர்களின் கையால், [QBR] உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 77 of Total Chapters 150
சங்கீதம் 77:45
1. நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்,
என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன்,
அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
2. என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்;
இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது;
என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது.
3. நான் தேவனை நினைத்தபோது அலறினேன்;
நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா)
4. நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்;
நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன்.
5. ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன்.
6. இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து,
என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்;
என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.
7. ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ?
இனி ஒருபோதும் தயை செய்யாமலிருப்பாரோ?
8. அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ?
வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோனதோ?
9. தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ?
கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா)
10. அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்;
ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருடங்களை நினைவுகூருவேன்.
11. யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன்,
உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;
12. உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து,
உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
13. தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது;
நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?
14. அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே;
மக்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கச்செய்தீர்.
15. யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை,
உமது வல்லமையினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா)
16. தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே,
தண்ணீர்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது;
ஆழங்களும் கலங்கினது.
17. மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது;
ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது;
உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.
18. உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது;
மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.
19. உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது;
உமது காலடிகள் தெரியப்படாமல்போனது.
20. மோசே ஆரோன் என்பவர்களின் கையால்,
உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர். PE
Total 150 Chapters, Current Chapter 77 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References