1. நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்,
என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார். |
2. என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்;
இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது. |
6. இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து,
என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது. |
9. தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ?
கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா) |
10. அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்;
ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருடங்களை நினைவுகூருவேன். |
15. யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை,
உமது வல்லமையினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா) |
17. மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது;
ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது. |
18. உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது;
மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது. |
19. உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது;
உமது காலடிகள் தெரியப்படாமல்போனது. |