1. என் தேவனாகிய யெகோவாவே, உம்மிடம் அடைக்கலம் தேடுகிறேன்;
என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லோருக்கும் என்னை விலக்கி காப்பாற்றும். |
2. எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய்,
விடுவிக்கிறவன் இல்லாததால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். |
4. என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும்,
காரணமில்லாமல் எனக்கு எதிரியானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால், |
5. எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து,
என்னுடைய உயிரைத் தரையிலே தள்ளி மிதித்து, என்னுடைய மகிமையைப் புழுதியிலே தாழ்த்தட்டும். (சேலா) |
6. யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து,
என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே. |
7. மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்;
அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும். |
8. யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்;
யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும் எனக்கு நியாயம்செய்யும். |
9. துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக;
நீதிமானை நிலைநிறுத்தும்; நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும், சிந்தைகளையும் சோதித்தறிகிறவர். |
12. அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்;
அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். |
14. இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்;
தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். |
16. அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும்,
அவனுடைய கொடுமை அவனுடைய உச்சந்தலையின்மேல் இறங்கும். |
17. நான் யெகோவாவை அவருடைய நீதியின்படி துதிப்பேன்.
நான் உன்னதமான உன்னதமான தேவனாகிய யெகோவாடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன். PE |