தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. என் தேவனாகிய யெகோவாவே, உம்மிடம் அடைக்கலம் தேடுகிறேன்; [QBR] என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லோருக்கும் என்னை விலக்கி காப்பாற்றும். [QBR]
2. எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், [QBR] விடுவிக்கிறவன் இல்லாததால், [QBR] அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். [QBR]
3. என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், [QBR] என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும், [QBR]
4. என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், [QBR] காரணமில்லாமல் எனக்கு எதிரியானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால், [QBR]
5. எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, [QBR] என்னுடைய உயிரைத் தரையிலே தள்ளி மிதித்து, [QBR] என்னுடைய மகிமையைப் புழுதியிலே தாழ்த்தட்டும். (சேலா) [QBR]
6. யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, [QBR] என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி, [QBR] எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே. [QBR]
7. மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்; [QBR] அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும். [QBR]
8. யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்; [QBR] யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும் [QBR] எனக்கு நியாயம்செய்யும். [QBR]
9. துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக; [QBR] நீதிமானை நிலைநிறுத்தும்; [QBR] நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும், [QBR] சிந்தைகளையும் சோதித்தறிகிறவர். [QBR]
10. செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது. [QBR]
11. தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; [QBR] அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன். [QBR]
12. அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; [QBR] அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். [QBR]
13. அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்; [QBR] தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார். [QBR]
14. இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; [QBR] தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். [QBR]
15. குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; [QBR] தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். [QBR]
16. அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும், [QBR] அவனுடைய கொடுமை அவனுடைய உச்சந்தலையின்மேல் இறங்கும். [QBR]
17. நான் யெகோவாவை அவருடைய நீதியின்படி துதிப்பேன். [QBR] நான் உன்னதமான உன்னதமான தேவனாகிய யெகோவாடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 7 of Total Chapters 150
சங்கீதம் 7:45
1. என் தேவனாகிய யெகோவாவே, உம்மிடம் அடைக்கலம் தேடுகிறேன்;
என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லோருக்கும் என்னை விலக்கி காப்பாற்றும்.
2. எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய்,
விடுவிக்கிறவன் இல்லாததால்,
அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
3. என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும்,
என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும்,
4. என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும்,
காரணமில்லாமல் எனக்கு எதிரியானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,
5. எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து,
என்னுடைய உயிரைத் தரையிலே தள்ளி மிதித்து,
என்னுடைய மகிமையைப் புழுதியிலே தாழ்த்தட்டும். (சேலா)
6. யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து,
என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி,
எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
7. மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்;
அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.
8. யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்;
யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும்
எனக்கு நியாயம்செய்யும்.
9. துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக;
நீதிமானை நிலைநிறுத்தும்;
நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும்,
சிந்தைகளையும் சோதித்தறிகிறவர்.
10. செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது.
11. தேவன் நீதியுள்ள நியாயாதிபதி;
அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன்.
12. அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்;
அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
13. அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்;
தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார்.
14. இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்;
தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.
15. குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்;
தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
16. அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும்,
அவனுடைய கொடுமை அவனுடைய உச்சந்தலையின்மேல் இறங்கும்.
17. நான் யெகோவாவை அவருடைய நீதியின்படி துதிப்பேன்.
நான் உன்னதமான உன்னதமான தேவனாகிய யெகோவாடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன். PE
Total 150 Chapters, Current Chapter 7 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References