தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்; [QBR] துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும். [QBR]
2. சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து, [QBR] பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள். [QBR]
3. அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; [QBR] ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள். [QBR]
4. யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும், [QBR] அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. [QBR]
5. அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; [QBR] பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது. [QBR]
6. யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், [QBR] அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது. [QBR]
7. அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, [QBR] ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். [QBR]
8. பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; [QBR] உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக. [QBR]
9. அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். [QBR]
10. யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, [QBR] மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார். [QBR]
11. யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், [QBR] அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும். [QBR]
12. யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும், [QBR] அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது. [QBR]
13. யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார். [QBR]
14. தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார். [QBR]
15. அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார். [QBR]
16. எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்; [QBR] போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான். [QBR]
17. காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; [QBR] அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது. [QBR]
18. தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; [QBR]
19. பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், [QBR] யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது. [QBR]
20. நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; [QBR] அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். [QBR]
21. அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், [QBR] நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும். [QBR]
22. யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 33 of Total Chapters 150
சங்கீதம் 33:58
1. நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்;
துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும்.
2. சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து,
பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள்.
3. அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள்.
4. யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும்,
அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.
5. அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்;
பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது.
6. யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும்,
அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது.
7. அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து,
ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.
8. பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக;
உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக.
9. அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
10. யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து,
மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார்.
11. யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும்,
அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
12. யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும்,
அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது.
13. யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்.
14. தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்.
15. அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.
16. எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்;
போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான்.
17. காப்பாற்றுவதற்கு குதிரை வீண்;
அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது.
18. தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
19. பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும்,
யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது.
20. நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது;
அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
21. அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால்,
நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும்.
22. யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக. PE
Total 150 Chapters, Current Chapter 33 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References