1. தேவனே, நான் ஆயத்தமாக இருக்கிறேன். எனது இருதயமும் ஆத்துமாவும் துதிப் பாடல்களைப் பாடவும் இசைக்கவும் தயாராக இருக்கிறது.
|
3. கர்த்தாவே, நாங்கள் உம்மை எல்லா தேசங்களிலும் துதிப்போம். பிற ஜனங்கள் மத்தியில் நாங்கள் உம்மைத் துதிப்போம்.
|
4. கர்த்தாவே, உமது அன்பு வானங்களைக் காட்டிலும் உயர்ந்தது. உமது சத்தியம் உயரமான மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.
|
6. தேவனே, உமக்கு வேண்டியவர்களைக் காப் பாற்ற இதைச் செய்யும். எனது ஜெபத்திற்குப் பதில் தாரும், உமது மிகுந்த வல்லமையை மீட்பதற்குப் பயன்படுத்தும்.
|
7. தேவன் அவரது ஆலயத்திலிருந்து பேசி, "நான் போரில் வென்று அவ்வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியடைவேன்! என் ஜனங்களுக்கு இத் தேசத்தைப் பங்கிடுவேன். அவர்களுக்குச் சீகேமைக் கொடுப்பேன். அவர்களுக்குச் சுக்கோத் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன்" என்றார்.
|
8. கீலேயாத்தும் மனாசேயும் எனக்குரியனவாகும். எப்பிராயீம் என் தலைக்குப் பெலனான அணியாகும். யூதா என் நியாயம் அறிவிக்கும் கோல்
|
9. மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம். ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை. நான் பெலிஸ்தியரைத் தோற்கடித்து வெற்றி ஆரவாரம் செய்வேன்."
|