2. ஆண்டவர் கூறுவது இதுவே; வேற்றினங்களின் வழியைக் கற்றுக் கொள்ளாதீர்; வானத்தில் தோன்றும் அடையாளங்களைக் கண்டு கலங்காதீர்; வேற்றினத்தாரே அவற்றால் கலக்கமுறுவர்.
|
3. வேற்றினங்கள் வழிபடும் சிலைகள் வீணானவை; அவை காட்டிலிருந்து வெட்டப்பட்ட மரத்தாலானவை; கைவினைஞர் உளியால் செய்த வேலைப்பாடுகள்.
|
5. அவை வெள்ளரித் தோட்டத்துப் பொம்மை போன்றவை; அவற்றால் பேச முடியாது; அவற்றைத் தூக்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். அவற்றால் நடக்கவும் முடியாது. அவை நன்மையும் செய்யா; தீமையும் செய்யா; அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டாம்.
|
7. மக்களினங்களின் மன்னரே! உமக்கு அஞ்சாதவர் யார்? அரசுரிமை உமதே; வேற்றினத்தாரின் ஞானிகள் அனைவரிலும் அவர்களின் அரசுகள் அனைத்திலும் உமக்கு நிகர் யாருமிலர்.
|
9. தர்சீசிலிருந்து வெள்ளித் தகடுகளும், ஊபாசிலிருந்து பொன்னும் வந்து சேர்கின்றன. அவை கைவினைஞரின் வேலைப்பாடுகள்; பொற்கொல்லனின் கைத்திறனால் ஆனவை; ஊதா, கருஞ்சிவப்பு உடைகளைக் கொண்டவை. அவை எல்லாமே தேர்ச்சிபெற்ற கைவினைஞரின் வேலைப்பாடுகள்.
|
10. ஆனால், ஆண்டவரே உண்மையான கடவுள்! அவரே வாழும் கடவுள்! என்றும் ஆளும் அரசர்! அவர் வெஞ்சினம் கண்டு நிலம் நடுங்கும்; அவர் கடுங்கோபத்தை வேற்றினத்தார் தாங்கிக்கொள்ளார்.
|
11. நீ அவர்களுக்கு இவ்வாறு கூறு; விண்ணையும் மண்ணையும் உருவாக்காத அந்தத் தெய்வங்கள் மண்ணின் மீதும் விண்ணின் கீழும் இல்லாதொழியும்.
|
12. அவரே தம் ஆற்றலால் மண்ணுலகைப் படைத்தார்; தம் ஞானத்தால் பூவுலகை நிலை நாட்டினார்; தம் கூர்மதியால் விண்ணுலகை விரித்தார்.
|
13. அவர் குரல் கொடுக்க வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகிறது; மண்ணுலகின் எல்லையினின்று மேகங்கள் எழச்செய்கிறார்; மழை பொழியுமாறு மின்னல் வெட்டச் செய்கிறார்; தம் கிடங்குகளினின்று காற்று வீசச் செய்கிறார்.
|
14. மனிதர் யாவரும் மூடர்கள், அறிவிலிகள்; கொல்லர் எல்லாரும் தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்; அவர்களின்; வார்ப்புப் படிமங்கள் பொய்யானவை; அவற்றுக்கு உயிர் மூச்சே இல்லை.
|
16. யாக்கோபின் பங்காய் இருப்பவரோ இவற்றைப் போன்றவர் அல்லர்; அவரே அனைத்தையும் உருவாக்கியவர்; அவரது உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேல் இனத்தை உருவாக்கியவரும் அவரே; படைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயராகும்.
|
18. ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே; நாட்டில் வாழ்வோரை இத்தருணத்தில் வீசி எறிவேன்; அவர்கள் என்னைக் கண்டுணருமாறு அவர்களுக்குத் துன்பம் வருவிப்பேன்.
|
19. ஐயோ நான் நொறுங்குண்டேன்; என் காயம் கொடியது; நானோ "உண்மையில் இது ஒரு நோய்; நான் இதைத் தாங்கியே ஆக வேண்டும்" என்று எண்ணிக்கொண்டேன்.
|
20. என் கூடாரம் அழிக்கப்பட்டது; அதன் கயிறுகளெல்லாம் அறுத்தெறியப்பட்டன; என் மக்கள் என்னைவிட்டுச் சென்றுவிட்டனர்; அவர்கள் இங்கு இல்லை; என் கூடாரத்தை மீண்டும் எழுப்புவார் எவருமிலர்; அதன் திரைகளைக் கட்டுவார் யாருமிலர்.
|
21. ஏனெனில், மேய்ப்பவர்கள் மூடர்களாய் இருந்தனர்; அவர்கள் ஆண்டவரைத் தேடவில்லை; எனவே, அவர்கள் வாழ்வு வளம் பெறவில்லை; அவர்களின் மந்தைகள் எல்லாம் சிதறிப்போயின.
|
22. குரல் ஒலி ஒன்று கேட்கின்றது; அது அண்மையில் ஒலிக்கின்றது; வடக்கு நாட்டிலிருந்து பெருங் கொந்தளிப்பு எழுகின்றது; யூதாவின் நகர்கள் பாழாகிக் குள்ள நரிகளின் வளையாகப் போகின்றன.
|
23. ஆண்டவரே! நான் அறிவேன்; மனிதர் செல்ல வேண்டிய வழி அவர்களின் கையில் இல்லை; நடப்பவன் காலடிப் போக்கும் அவர்களின் அதிகாரத்தில் இல்லை.
|
24. ஆண்டவரே! உம் சினத்திற்கு ஏற்ப அன்று, உன் நீதிக்கு ஏற்ப என்னைத் திருத்தியருளும். இல்லையெனில், நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன்.
|
25. உம்மை அறியாத வேற்றினத்தார் மேலும், உம் பெயரைச் சொல்லி மன்றாடாத குடும்பத்தார் மேலும் உன் சீற்றத்தைக் காட்டியருளும். ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கிவிட்டார்கள்; விழுங்கி முற்றிலும் அழித்து விட்டார்கள்; அவர் குடியிருப்பையும் பாழாக்கிவிட்டார்கள்.
|