ரூத் அதிகாரம் 2
6 அதற்கு அவன், "இவள், மோவாப் நாட்டிலிருந்து நோயேமியோடு வந்த மோவாபிய பெண்.
7 அறுவடை செய்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தும் கதிர்களைப் பொறுக்கிக் கொள்ள அனுமதி கேட்டாள். காலை முதல் இதுவரை வயலிலேயே நிற்கிறாள். சிறிது நேரத்திற்குக் கூட அவள் வீட்டுக்குப் போகவில்லை" என்று சொன்னான்.
8 இப்பொழுது போசு ரூத்தைப் பார்த்து, "மகளே, கேள். கதிர் பொறுக்குவதற்காக நீ வேறு வயலுக்குப் போகாமலும், இவ்விடத்தை விட்டு வேறு எங்கும் செல்லாமலும் இங்கேயே என் ஊழியக்காரிகளோடு தங்கியிரு.
6