Tamil சத்தியவேதம்

சங்கீதம் மொத்தம் 150 அதிகாரங்கள்

சங்கீதம்

சங்கீதம் அதிகாரம் 83
சங்கீதம் அதிகாரம் 83

1 ஆண்டவரே, மௌனமாயிராதேயும்: இறைவனே, பேசாமலிராதேயும், சும்மாயிராதேயும்.

2 ஏனெனில், இதோ உம் எதிரிகள் குதித்தெழுகிறார்கள்; உம்மைப் பகைக்கிறவர்கள் தலைதூக்குகிறார்கள்.

3 உம் மக்களுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்: நீர் பாதுகாப்பவருக்கு எதிராக ஆலோசனை செய்கிறார்கள்.

4 வாருங்கள் அவர்களை ஒழித்துவிடுவோம்; அவர்கள் இனமே இல்லாதபடி செய்து விடுவோம்: இஸ்ராயேல் என்னும் பெயரையே ஒழித்து விடுவோம்' என்கிறார்கள்.

சங்கீதம் அதிகாரம் 83

5 உண்மையாகவே அவர்கள் ஒருமனப்பட்டு சதித்திட்டம் செய்கிறார்கள் உமக்கு எதிராக உடன்படிக்கை செய்து கொள்கிறார்கள்.

6 ஏதோமின் கூடாரத்திலுள்ளவர்கள் இஸ்மாயேல் இனத்தவர்கள், மோவாபித்தர், ஆகாரித்தர்,

7 கேபோல், ஆமோன், அமலேக், பிலிஸ்தியா ஆகியோர் தீர்நாட்டு மக்களுடன் உடன்படிக்கை செய்கிறார்கள்.

8 அசீரியர் கூட அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள்: லோத்தின் இனத்தார்க்கு அவர்கள் கைகொடுத்து உதவினார்கள்.

சங்கீதம் அதிகாரம் 83

9 மாதியான் நாட்டினருக்கும் சீசோன் நீரோடையருகில் சீசாராவுக்கும், யாபினுக்கும் அன்று நீர் செய்தது போல் செய்வீராக.

10 இவர்கள் எந்தோரில் அழிவையடைந்தனர்: நிலத்துக்கு எருவாயினர்.

11 ஓரேப், சேப் இவர்களுக்கு நிகழ்ந்தது போல, அவர்களுடைய தலைவர்களை அழித்துவிடும்: சேபே, சால்மனாவுக்கு நிகழ்ந்தது போல, அவர்களுடைய தளபதிகளுக்கு நிகழ்வதாக.

சங்கீதம் அதிகாரம் 83

12 இறைவனுக்குச் சொந்தமான செழுமை மிக்க நாடுகளை கைப்பற்றிக் கொள்வோம்' என்று அந்தத் தலைவர்கள் கூறினர்.

13 என் இறைவனே, அவர்களைச் சுழல் காற்றில் சிக்கிய துரும்பு போலாக்கி விடும்: காற்றில் பறக்கும் பதர் போலாக்கி விடும்.

14 காட்டை எரித்து விடும் நெருப்புப் போலவும், மலைகளை எரித்து விடும் தீப்போலவும்,

15 நீர் அவர்களை உமது பெருங் காற்றினால் விரட்டியடியும்: உம்முடைய புயல் காற்றினால் அவர்களைக் கலங்கடியும்.

சங்கீதம் அதிகாரம் 83

16 மானக் கேட்டால் அவர்கள் முகம் கவிழச் செய்யும்: அப்போது தான் ஆண்டவரே, அவர்கள் உம் நாமத்தைத் தேடுவார்கள்.

17 எந்நாளும் அவர்கள் வெட்கமுற்றுக் கலங்குவார்களாக: நாணமுற்று ஒழிவார்களாக.

18 ஆண்டவர் ' என்னும் பெயர் தாங்கும் உம்மை அறிந்து கொள்வார்களாக: உலகனைத்திற்கும் உன்னதமானவர் நீரேயென்று அவர்கள் தெரிந்து கொள்வார்களாக.