Tamil சத்தியவேதம்

சங்கீதம் மொத்தம் 150 அதிகாரங்கள்

சங்கீதம்

சங்கீதம் அதிகாரம் 67
சங்கீதம் அதிகாரம் 67

1 கடவுள் நம்மீது இரங்கி, நமக்கு ஆசி அளிப்பாராக: நம்மீது தம் திருமுக ஒளியை வீசுவாராக.

2 அப்போது உலகம் உமது வழியை அறிந்து கொள்ளும்: மக்களினங்கள் எல்லாம் உமது மீட்பை உணரும்.

3 இறைவா, மக்களினங்களின் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக: மக்கள் எல்லாரும் உம்மைக் கொண்டாடுவார்களாக.

4 நீதியோடு மக்களை ஆள்கின்றீர், உலகத்து மக்களினங்கள் மீது ஆட்சி செலுத்துகின்றீர் என்று நாடுகள் அனைத்தும் மகிழ்ந்து கூறட்டும்.

சங்கீதம் அதிகாரம் 67

5 இறைவா, மக்களினங்கள் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக: மக்கள் எல்லாரும் உம்மைக் கொண்டாடுவார்களாக.

6 பூமி தன் பலனைத் தந்தது: கடவுள் நமக்கு ஆசி அளித்தார்.

7 கடவுள் நமக்கு ஆசி அளிப்பாராக: மாநிலத்தின் கடையெல்லை வரை மக்கள் அவருக்கு அஞ்சுவார்களாக.