Tamil சத்தியவேதம்

சங்கீதம் மொத்தம் 150 அதிகாரங்கள்

சங்கீதம்

சங்கீதம் அதிகாரம் 131
சங்கீதம் அதிகாரம் 131

1 ஆண்டவரே, என் இதயம் இறுமாப்பு கொள்ளவில்லை என் பார்வை மேட்டிமையோடு விளங்கவில்லை; பெரிய காரியங்களையோ, என் ஆற்றலுக்கு மிஞ்சின காரியங்களையோ நான் தேடவில்லை.

2 மாறாக, தாயின் மடியில் குழந்தையிருப்பது போல என்னுள் என் ஆன்மா அமைதியுடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன்: குழந்தையைப் போல் என் உள்ளம் அமைதியாய் இருக்கிறது.

3 இஸ்ராயேலே, ஆண்டவர் மீது நம்பிக்கை வை: இன்றும் என்றும் அவரை நம்பு