Tamil சத்தியவேதம்

2 தீமோத்தேயு மொத்தம் 4 அதிகாரங்கள்

2 தீமோத்தேயு

2 தீமோத்தேயு அதிகாரம் 4
2 தீமோத்தேயு அதிகாரம் 4

1 கடவுள் முன்னிலையிலும், வாழ்வோர்க்கும் இறந்தோர்க்கும் தீர்ப்பிடப்போகும் கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் இவரது பிரசன்னத்தை முன்னிட்டும், இவரது அரசாட்சியை முன்னிட்டும் நான் வற்புறுத்திக் கேட்டுக் கொள்வது: தேவ வார்த்தையை அறிவியும்; வாய்ப்பு இருந்தாலும் இல்லாவிடினும் வலியுறுத்திப்பேசும்;

2 கண்டித்துப் பேசும்; கடிந்துகொள்ளும்; அறிவுரை கூறும் மிகுந்த பொறுமையோடு போதித்துக்கொண்டே இரும்.

2 தீமோத்தேயு அதிகாரம் 4

3 ஒருகாலம் வரும், அப்போது மக்கள் நலமிக்க போதனையைத் தாங்கமாட்டார்கள். மாறாக, செவித்தினவு கொண்டவர்களாய்த் தங்கள் மனம் போன போக்கிலே எண்ணிறந்த போதகர்களைத் திரட்டிக்கொள்வர்.

4 உண்மைக்குச் செவி கொடுக்க மறுத்து, கட்டுக் கதைகளுக்குத்தான் செவி சாய்ப்பர்.

5 நீரோ எந்தச் சூழ்நிலையிலும் சமநிலையாயிரும். துன்பத்தை ஏற்றுக்கொள்ளும். நற்செய்தித் தொண்டனுக்குரிய வேலையைச் செய்யும். உம் திருப்பணியைச் செவ்வனே செய்யும்.

2 தீமோத்தேயு அதிகாரம் 4

6 எனக்கோ, பிரியவேண்டிய நேரம் வந்து விட்டது. இதோ என் வாழ்க்கை, பலியின் இரத்தமென வார்க்கப்படுகிறது.

7 சீரியதொரு பந்தயத்தில் ஓடினேன், ஓட்டத்தை முடித்து விட்டேன்; விசுவாசத்தைப் பாதுகாத்தேன்.

8 இனி எனக்கு இருப்பது ஒன்றே; நல்வாழ்வின் பரிசான வெற்றி வாகை எனக்காகக் காத்திருக்கிறது. இதை நீதியுள்ள நடுவராம் ஆண்டவர் அந்த இறுதி நாளிலே எனக்குக் கைம்மாறாக அருள்வார். எனக்கு மட்டுமன்று, அவரது பிரசன்னத்தை ஆர்வத்தோடு எதிர்பார்க்கும் அனைவருக்கும் அருள்வார்.

2 தீமோத்தேயு அதிகாரம் 4

9 காலம் தாழ்த்தாது விரைவில் வந்து சேரும். ஏனெனில், உலகப்பற்று மேற்கொண்டதால்,

10 தேமா என்னைக் கைவிட்டுத் தெசலோனிக்கேவுக்குப் போய் விட்டான். கிரேஸ்கே கலாத்தியாவுக்கும், தீத்து தல்மாத்தியாவுக்கும் சென்று விட்டனர்.

11 லூக்கா மட்டுமே என்னுடன் இருக்கிறார். உம்மோடு மாற்குவையும் கூட்டிக்கொண்டு வாரும். அவர் எனக்குத் திருப்பணியில் ஏற்ற துணை.

2 தீமோத்தேயு அதிகாரம் 4

12 தீக்கிக்குவை எபேசுவுக்கு அனுப்பிவிட்டேன்.

13 நீர் வரும்போது துரோவாவூரில் கார்ப்புவிடம் நான் விட்டுவந்த போர்வையை எடுத்துக் கொண்டுவாரும். நூல்களையும், சிறப்பாகத் தோல் சுருள்களையும் கொண்டு வாரும்.

14 கன்னானாகிய அலெக்சாந்தர் எனக்கு மிகத் தீங்கிழைத்தான். அவனுடைய செயல்களுக்குத்தக்கபடி ஆண்டவர் அவனுக்குக் கூலி கொடுப்பார்.

15 நீரும் அவனைப்பற்றி எச்சரிக்கையாயிரும். அவன் நம் போதனையை மிகவும் எதிர்த்து நின்றான்.

2 தீமோத்தேயு அதிகாரம் 4

16 நான் முதல் விசாரணையில் என் வழக்கை எடுத்துச் சொன்னபோது, எனக்குத் துணை நிற்க யாரும் முன்வரவில்லை. எல்லாரும் என்னைக் கை விட்டனர். அக்குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக.

17 ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை நின்றார், என் வழியாய் நற்செய்தியின் அறிவிப்பு முற்றுப் பெறும்படியும், புறவினத்தார் அனைவரும் அதைக் கேட்டறியும்படியும் என்னை உறுதிப்படுத்தினார். சிங்கத்தின் வாயினின்று நான் விடுவிக்கப்பட்டேன்.

2 தீமோத்தேயு அதிகாரம் 4

18 ஆண்டவர் எனக்கு உண்டாகும் எல்லாத் தீங்குகளினின்றும் என்னை விடுவித்து மீட்பளித்துத் தம்முடைய வானக அரசினுள் என்னைச் சேர்த்துக்கொள்வார். அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாகுக. ஆமென்.

19 பிரிஸ்காள், ஆக்கிலா, ஒனேசிப்போருவின் வீட்டார் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்.

20 எரஸ்து கொரிந்துவில் தங்கி விட்டான். துரேப்பீமு பிணியுற்றிருந்ததால் மிலேத்துவில் அவனை விட்டு வந்தேன்.

2 தீமோத்தேயு அதிகாரம் 4

21 குளிர்காலம் தொடங்குமுன் காலம் தாழ்த்தாமல் வந்து விடும். ஐபூலு, பூதே, லீனு, கிலவுதியாள், மற்றுமுள்ள சகோதரர் அனைவரும் உமக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.

22 (21b) ஆண்டவர் உம்மோடிருப்பாராக. இறை அருள் உங்களோடிருப்பதாக.