Tamil சத்தியவேதம்

2 கொரிந்தியர் மொத்தம் 13 அதிகாரங்கள்

2 கொரிந்தியர்

2 கொரிந்தியர் அதிகாரம் 6
2 கொரிந்தியர் அதிகாரம் 6

1 இறைவனின் உடனுழைப்பாளிகளான நாங்கள், நீங்கள் பெற்ற கடவுளின் அருளை வீணாக்க வேண்டாமென மன்றாடுகிறோம்.

2 ஏனெனில், "ஏற்ற காலத்தில் உனக்குச் செவிமடுத்தேன்; மீட்பின் நாளில் உனக்குத் துணை நின்றேன்" என்கிறார் இறைவன். இதோ, அந்த ஏற்புடைய காலம் இதுவே.

3 எங்கள் திருப்பணி, பழிச்சொல்லுக்கு உட்படாதவாறு நாங்கள் யாரையும் எதிலும் மனம் நோகச் செய்யவில்லை.

2 கொரிந்தியர் அதிகாரம் 6

4 ஆனால், வேதனைகள், நெருக்கடி, இடுக்கண்,

5 சாட்டையடிகள், சிறை வாழ்வு, குழப்பங்கள், அயரா உழைப்பு, கண்விழிப்பு, பட்டினி இவற்றையெல்லாம் மிகுந்த மன உறுதியோடு ஏற்றுக்கொண்டு,

6 புனிதம், அறிவு, பொறுமை, பரிவு, பரிசுத்த ஆவிக்குரிய செயல்கள், கள்ளமில்லா அன்பு இவற்றைக் கடைப்பிடித்து,

7 உண்மையே பேசி, கடவுளின் வல்லமையைப் பெற்றுக்கொண்டு இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வைச் சார்ந்த படைக்கலங்களை வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் தாங்கி,

2 கொரிந்தியர் அதிகாரம் 6

8 மேன்மையிலும் இழிவிலும், தூற்றப்படினும், போற்றப்படினும், அனைத்திலும் நாங்கள் கடவுளின் பணியாளரென்றே நடத்தையில் காட்டுகிறோம். எங்களை வஞ்சகர் என்கிறார்கள்; நாங்களோ உண்மையுள்ளவர்கள்.

9 அறியப்படாதவர்கள் என்கிறார்கள்; ஆனால், எல்லாரும் எங்களை அறிவார். சாகவேண்டியவர்களைப் போல் இருந்தாலும், இதோ, உயிர் வாழ்கிறோம். நாங்கள் ஒறுக்கப்படுகிறோம்; ஆனால், சாவுக்கு இரையாவதில்லை.

2 கொரிந்தியர் அதிகாரம் 6

10 துயரத்தில் ஆழ்ந்தவர்களாய்த் தென்படுகிறோம்; ஆனால், எப்பொழுதும் மகிழ்ச்சியில் திளைக்கிறோம். நாங்கள் ஏழைகளாயினும், பலரைச் செல்வராக்குகிறோம். ஒன்றுமே இல்லாதவர்கள்போல் இருக்கிறோம்; ஆனால், அனைத்துமே எங்களுக்குச் சொந்தம்.

11 கொரிந்தியரே, ஒளிவு மறைவின்றி உங்களிடம் பேசினோம்; எங்கள் உள்ளத்தில் உள்ளதை உங்களுக்கு வெளிப்படுத்தினோம்.

12 எங்கள் நெஞ்சம் கூம்பிவிடவில்லை, உங்கள் நெஞ்சந்தான் கூம்பிவிட்டது

2 கொரிந்தியர் அதிகாரம் 6

13 அப்படியிருக்க, என் குழந்தைகளிடம் சொல்லுவதுபோல் சொல்லுகிறேன்: நான் காட்டிய நேர்மைக்கு ஈடாக நீங்களும் உங்கள் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்துங்கள்.

14 அவிசுவாசிகளுடன் நீங்கள் தகாத முறையில் ஒரே நுகத்தடியில் இணைந்திருக்கலாகாது. இறை நெறிக்கும் தீய நெறிக்கும் தொடர்பேது?

15 ஒளிக்கும் இருளுக்கும் உறவேது? கிறிஸ்துவுக்கும் பேலியாருக்கும் உடன்பாடு உண்டோ?

2 கொரிந்தியர் அதிகாரம் 6

16 அவிசுவாசியோடு விசுவாசிக்குப் பங்குண்டோ? கடவுளின் கோயிலுக்கும் தெய்வங்களின் சிலைகளுக்கும் பொருத்த முண்டோ? உயிருள்ள கடவுளின் கோயில் நாம்தான்; இதைக் கடவுளே சொல்கிறார்: " அவர்களிடையே குடிகொள்வேன்; அவர்கள் நடுவில் நடமாடுவேன். அவர்களுக்கு நான் கடவுளாய் இருப்பேன், அவர்கள் என் மக்களாய் இருப்பர்.

17 ஆகவே, வேற்று மக்களிடமிருந்து வெளியேறுங்கள்; அவர்களைவிட்டுப் பிரிந்துபோங்கள் என்கிறார் ஆண்டவர். அசுத்தமானதைத் தொடவேண்டாம்; நாம் உங்களை ஏற்றுக்கொள்வேன்,

2 கொரிந்தியர் அதிகாரம் 6

18 உங்களுக்கு நான் தந்தையாய் இருப்பேன்; எனக்கு நீங்கள் புதல்வராகவும், புதல்வியராகவும் இருப்பீர்கள் என்கிறார் எல்லாம் வல்ல ஆண்டவர்.