2 நாளாகமம் அதிகாரம் 19
4 யோசபாத் யெருசலேமில் குடிபுகுந்த பிறகு தன் குடிமக்களைக் காணப் புறப்பட்டுப் பெர்சாபே முதல், எப்பிராயீம் மலை நாடு வரை வாழ்ந்து வந்த மக்களிடம் சென்று, அவர்களைத் தங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவரின் வழிபாட்டுக்குத் திருப்பினான்.
5 மேலும் யூதா நாடெங்குமுள்ள அரணுள்ள நகர் ஒவ்வொன்றிலும் நீதிபதிகளை ஏற்படுத்தினான்.
6 அவர்களை நோக்கி, "நீங்கள் உங்கள் கடமைகளைக் கவனமாய் நிறைவேற்றுங்கள். நீங்கள் மனிதரின் கட்டளையால் அன்று, ஆண்டவரின் திருப்பெயரை முன்னிட்டே நீதி வழங்க வேண்டும். ஏனெனில் நீதி வழங்க, இறைவன் உங்களோடு இருக்கிறார். நீங்கள் எந்தத் தீர்ப்பு இடுகிறீர்களோ அந்தத் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்.
5