Tamil சத்தியவேதம்

1 நாளாகமம் மொத்தம் 29 அதிகாரங்கள்

1 நாளாகமம்

1 நாளாகமம் அதிகாரம் 9
1 நாளாகமம் அதிகாரம் 9

1 இவ்வாறு இஸ்ராயேலர் எல்லாரும் கணக்கிடப் பட்டனர். இத்தொகை இஸ்ராயேல், யூதா அரசர்களின் வரலாறுகளில் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் (தங்கள் கடவுளுக்குப்) பிரமாணிக்கமாய் இருக்கவில்லை. எனவே சிறைப்படுத்தப்பட்டுப் பபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

2 அங்கிருந்து திரும்பி வந்து தங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் நகர்களிலும் முதன் முதல் வந்து வாழத் தொடங்கியவர்கள்: இஸ்ராயேலரும் குருக்களும், லேவியரும் ஆலய ஊழியருமேயாவர்.

1 நாளாகமம் அதிகாரம் 9

3 யூதா, பென்யமீன், எப்பிராயீம், மனாசே ஆகிய குலங்களின் மக்களில் சிலர் யெருசலேமில் குடியிருந்தனர். அவர்களின் பெயர்கள் வருமாறு:

4 யூதாவின் மகன் பாரேசின் சந்ததியில் பிறந்த ஒத்தே- இவர் அமீயூதின் மகன்; இவர் அம்ரியின் மகன்; இவர் ஒம்ராயிமின் மகன்; இவர் பொன்னியின் மகன்.

5 சிலோவியரில் மூத்தவர் அசாயியாவும், அவர் மக்களும்;

6 சாராவின் புதல்வர்களில் எகுயேலும், அவருடைய சகோதரர்களான அறுநூற்றுத் தொண்ணுறு பேருமாம்.

1 நாளாகமம் அதிகாரம் 9

7 பென்யமீன் புதல்வரிலோ, அசனாவுக்குப் பிறந்த ஓதுயியாவின் மகன் மொசொல்லாமுக்குப் பிறந்த சலோவும், யெரோகாமின் மகன் யொபானியாவும், மொக்கோரியின் மகன் யொபானியாவும்,

8 மொக்கோரியுன் மகன் ஓசிக்குப் பிறந்த ஏலாவும், எபானியாசின் மகன் ரகுயேலின் புதல்வன் சப்பாத்தியாசுக்குப் பிறந்த மொசொல்லாமும்,

9 தத்தம் குடும்ப வரிசைப்படி அவர்களுடைய உறவினராயிருந்த தொள்ளாயிரத்து ஐம்பத்தாறு பேருமாம். இவர்கள் அனைவரும் தங்கள் வம்ச வரிசைப்படி குடும்பத் தலைவராய் இருந்தனர்.

1 நாளாகமம் அதிகாரம் 9

10 குருக்களில் யெதாயிரா, யொயியாரிப், யாகீன்,

11 அக்கித்தோப்பின் மகன் மராயியோத்தின் புதல்வன் சாத்தோக்குக்குப் பிறந்த மொசொல்லாமின் மகன் எல்கியாசின் புதல்வனும் ஆண்டவரது ஆலயத்தின் பெரிய குருவுமான அசாரியாசுமாம்.

12 மெல்கியாசின் புதல்வன், பாசூரின் மகன் எரோகாமுக்குப் பிறந்த அதாயியாசு, எம்மோரின் மகன் மொசொல்லாமித்தின் புதல்வன் மொசொல்லாமுக்குப் பிறந்த எஸ்ராவின் மகன் அதியேலுடைய புதல்வன் மாசாயி;

1 நாளாகமம் அதிகாரம் 9

13 மேலும் தங்கள் குடும்பங்களில் தலைவர்களாயிருந்த அவர்களுடைய உறவினர் ஆயிரத்து எழுநூற்று அறுபது பேர். இவர்கள் ஆண்டவரின் ஆலயத்தில் பணிவிடை புரிதலில் திறமை மிக்கவர்களாவர்.

14 லேவியர்களில் மெராரியின் புதல்வரில் அசேபியாவின் மகன் எஸ்ரிகாமின் புதல்வன் அசூபுக்குப் பிறந்த செமையா,

15 தம்சனான பக்பக்கார், காலால், அசாப்பின் புதல்வன் செக்கிரியின் மகன் மிக்காவுக்குப் பிறந்த மத்தானியா,

1 நாளாகமம் அதிகாரம் 9

16 யூதித்தனுக்குப் பிறந்த காலாலின் மகன் செமெயியாசுக்குப் பிறந்த ஒப்தியா, நெத்தோப்பாத்தியருடைய ஊர்களில் குடியிருந்த எல்கனாவின் மகன் ஆசாவுக்குப் பிறந்த பரக்கியா.

17 வாயிற்காவலர் பெயர்கள் வருமாறு: செல்லும், ஆக்கூப், தெல்மோன், அகிமாம் ஆகியோரும் அவர்களின் உறவினருமாம். செல்லுமே இவர்களுக்குத் தலைவராய் இருந்தார்.

18 லேவியருடைய கூடாரங்களில் வாழ்ந்து கொண்டு, கிழக்கே உள்ள அரச வாயிலை இந்நாள் வரை இவர்களே காவல் புரிந்து வருகின்றனர்.

1 நாளாகமம் அதிகாரம் 9

19 கோரேயின் புதல்வன் அபியசாப்பின் மகன் கோரேக்குப் பிறந்த செல்லும் என்பவரும், அவருடைய சகோதரர்களும், அவருடைய தந்தை வீட்டாரும் உறவினருமான கோரியர்களும் கூடார வாயிலைக் காவல் புரிந்து வந்தனர். மேலும் அவர்களுடைய குடும்பத்தார் ஆண்டவரது பாளைய வாயிலைக் காத்து வந்தனர்.

20 எலியெசாருடைய மகன் பினேசு முன்பு அவர்களுக்குத் தலைவராய் இருந்தார். ஆண்டவரும் அவரோடு இருந்தார்.

1 நாளாகமம் அதிகாரம் 9

21 மொசொல்லாமியாவின் மகன் சக்கரியாஸ் உடன்படிக்கைக் கூடார வாயிலைக் காவல் புரிந்து வந்தார்.

22 கதவுகள் தோறும் காவல் புரியத் தேர்ந்துகொள்ளப்பட்ட இவர்களின் எண்ணிக்கை இருநூற்றுப் பன்னிரண்டு. அவர்கள் தங்கள் சொந்த ஊர்களிலே தலைமுறை அட்டவணையில் பதிவு செய்யப்பட்டிருந்தவர்கள். தாவீதும் திருக்காட்சியாளர் சாமுவேலும் அவர்களை நம்பி அந்தந்த வேலைகளில் அமர்த்தினர்.

1 நாளாகமம் அதிகாரம் 9

23 இவ்வாறு அவர்களும் அவர்களின் புதல்வர்களும் ஆண்டவரது வீடான கூடாரத்தின் வாயில்களைக் காவல் புரிய நியமிக்கப்பட்டனர்.

24 வாயிற் காவலர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளிலும் காவல் புரிந்தனர்.

25 அவர்களுடைய உறவினர்கள் தங்கள் ஊர்களிலிருந்து வந்து சிலசமயம் ஒருவாரத்திற்கு அவர்களோடு இருப்பர்.

26 ஏனெனில் தலைமைக் காவலரான அந்த நால்வரும் அங்கேயே நிரந்தரமாகத் தங்கியிருந்தார்கள். லேவியரான இவர்கள் ஆண்டவரது ஆலயத்தின் கருவூல அறைகளையும் பண்டசாலைகளையும் கண்காணித்து வந்தனர்.

1 நாளாகமம் அதிகாரம் 9

27 அவர்கள் தாங்கள் காவல் புரியும் காலத்தில் ஆண்டவரின் ஆலயத்தைச் சுற்றிலும் இரவோடு இரவாய்க் காவல் புரிந்து காலையில் குறித்த நேரத்தில் கதவுகளைத் திறந்து விடுவார்கள்.

28 அவர்களுள் சிலர் திருவழிபாட்டிற்குத் தேவையான தட்டுமுட்டுகளைப் பாதுகாத்து வந்தனர். அவற்றை உள்ளே கொண்டு வருமுன்னும் வெளியே கொண்டு போகுமுன்னும் எண்ணிப் பார்ப்பது அவர்கள் கடமை.

29 அவர்களில் சிலர் திருவிடத்தின் ஏனைய தட்டு முட்டுகளையும் மிருதுவான மாவு, திராட்சை இரசம், எண்ணெய், தூபம், நறுமணப் பொருட்களையும் மேற்பார்த்து வந்தனர்.

1 நாளாகமம் அதிகாரம் 9

30 குருக்களின் புதல்வர்களோ நறுமணப் பொருட்களைக் கொண்டு நறுமண எண்ணெய் தயாரிப்பார்கள்.

31 கோரியனான செல்லும் என்பவரின் தலைமகன் மத்தாத்தியாசு என்ற லேவியன் பொரிச்சட்டியில் பொரிக்கப்பட்டவற்றைக் கவனித்து வந்தார்.

32 அவர்களுடைய சகோதரரான காத்தின் புதல்வரில் சிலருக்குக் காணிக்கை அப்பங்களைக் கண்காணிக்கும் பணி கொடுக்கப் பட்டிருந்தது. அவர்கள் ஓய்வுநாள் தோறும் புது அப்பங்களைத் தயாரித்துக் கொண்டு வருவர்.

1 நாளாகமம் அதிகாரம் 9

33 இவர்களிலே குடும்பத்தலைவர்களாய் இருந்து வந்த லேவியரான பாடகர் இரவும் பகலும் இடைவிடாது பணிபுரிய வேண்டியிருந்ததால் மற்ற வேலைகளினின்று விடுபட்டு ஆலய அறைகளிலேயே தங்கியிருந்தார்கள்.

34 லேவியர்களில் குடும்பத்தலைவர்களாய் இருந்தவர் தத்தம் தலைமுறைகளில் தலைவர்களாயும் இருந்தனர். இவர்கள் யெருசலேமில் குடியிருந்தார்கள்.

35 காபாவோனில் வாழ்ந்து வந்தவர்கள்: மாக்கா என்பவளின் கணவரான ஏகியேல்;

1 நாளாகமம் அதிகாரம் 9

36 அவருடைய தலைமகன் அப்தோன்; பின் பிறந்தவர்கள் சூர், சீஸ், பால்,

37 நேர், நாதாப், கெதோர், அகியோசக்கரியாஸ், மசெல்லோத் ஆகியோர்.

38 மசெல்லோத் சமானைப் பெற்றார். இவர்கள் தங்கள் உறவினருக்கு அருகே யெருசலேமில் தங்கள் குடும்பத்தினரோடு குடியிருந்தனர்.

39 நேர் சீசைப் பெற்றார்; சீஸ் சவுலைப் பெற்றார்; சவுல் யோனத்தான், மெல்கிசுவா, அபினதாப், ஏசுபால் என்பவர்களைப் பெற்றார்.

1 நாளாகமம் அதிகாரம் 9

40 யோனத்தானின் மகன் பெயர் மெரிபாவால். மெரிபாவால் மிக்காவைப் பெற்றார்.

41 மிக்காவின் புதல்வரோ பித்தோன், மெலேக், தராகா, ஆகாஸ் ஆகியோர்.

42 ஆகாஸ் யாராவைப் பெற்றார். யாரா அலமாத், அஸ்மோத், சம்ரி என்போரைப் பெற்றார். சம்ரி மோசாவைப் பெற்றார்.

43 மோசா பானாவைப் பெற்றார். இவரின் மகன் ரப்பாயியா ஏலாசாவைப் பெற்றார்.

1 நாளாகமம் அதிகாரம் 9

44 ஏலாசா ஆசேலைப் பெற்றார். ஆசேலுக்கு எஸ்ரிகாம், பொக்ரு, இஸ்மாயேல், சாரியா, ஒப்தியா, ஆனான் ஆகிய மக்கள் அறுவர் இருந்தனர்.