Tamil சத்தியவேதம்

யோபு மொத்தம் 42 அதிகாரங்கள்

யோபு

யோபு அதிகாரம் 35
யோபு அதிகாரம் 35

அனைத்தையும் கடந்தவர் கடவுள் 1 எலிகூ தொடர்ந்து கூறினான்:

2 ‘நான் இறைவன்முன் நேர்மை யானவன்’ என நீர் சொல்வது சரியென நினைக்கின்றீரா?

3 ‘நான் பாவம் செய்யாததனால் எனக்கு என்ன ஆதாயம்? எனக்கு என்ன நன்மை?” என நீர் கேட்கின்றீர்.

யோபு அதிகாரம் 35

4 உமக்கும் உம் நண்பர்களுக்கும் சேர்த்து நான் பதில் அளிக்கின்றேன்;

5 வானங்களைப் பாரும்; கவனியும்; இதோ! உம்மைவிட உயரேயிருக்கும் முகில்கள்!

6 நீர் பாவம் செய்தால், அவருக்கெதிராய் என்ன சாதிக்கின்றீர்? நீர் மிகுதியான குற்றங்களைச் செய்வதால் அவருக்கு என்ன செய்து விடுகின்றீர்? [* யோபு 22:2-3.. ]

யோபு அதிகாரம் 35

7 நீர் நேர்மையாய் இருப்பதால் இவருக்கு நீர் அளிப்பதென்ன? அல்லது உம் கையிலிருந்து அவர் பெறுவதென்ன? [* யோபு 22:2-3.. ]

8 உம் கொடுமை உம்மைப்போன்ற மனிதரைக் துன்புறுத்துகின்றது; உம் நேர்மையும் மானிடர்க்கே நன்மை பயக்கின்றது. [* யோபு 22:2-3.. ]

யோபு அதிகாரம் 35

9 கொடுமைகள் குவிய அவர்கள் கூக்குரலிடுவர்; வலியவர் கைவன்மையால் கத்திக் கதறுவர்.

10 ஆனால் இவ்வாறு எவரும் சொல்வதில்லை; ‘எங்கே என்னைப் படைத்த கடவுள்? இரவில் பாடச் செய்பவர் எங்கே?

யோபு அதிகாரம் 35

11 நானிலத்தின் விலங்குகளைவிட நமக்கு அதிகமாய்க் கற்பிக்கின்றவரும் வானத்துப் புள்ளினங்களை விட நம்மை ஞானி ஆக்குகின்றவரும் அவரன்றோ?”

12 அங்கே அவர்கள் கூக்குரலிடுகின்றனர்; பொல்லார் செருக்கின் பொருட்டு அவர் பதில் ஒன்றும் சொல்லார்.

யோபு அதிகாரம் 35

13 வீண் வேண்டலை இறைவன் கண்டிப்பாய்க் கேளார்; எல்லாம் வல்லவர் அதைக் கவனிக்கவும் மாட்டார்.

14 இப்படியிருக்க, ‘நான் அவரைப் பார்க்கவில்லை; தீர்ப்பு அவரிடம் இருக்கின்றது. நான் அவருக்காகக் காத்திருக்கின்றேன்;’ என்று நீர் கூறும்போது, எப்படி உமக்குச்செவிகொடுப்பார்?

யோபு அதிகாரம் 35

15 இப்பொழுதோ, ‘கடவுளின் சினம் தண்டிப்பதில்லை; மனிதனின் மடமையை அவ்வளவாய் அவர் நோக்குவதில்லை’ என எண்ணி,

16 யோபு வெற்றுரை விளம்புகின்றார்; அறிவில்லாமல் சொற்களைக் கொட்டுகின்றார்.