Tamil சத்தியவேதம்
யோபு மொத்தம் 42 அதிகாரங்கள்
யோபு அதிகாரம் 18
தீயோரின் தவிர்க்க முடியாத முடிவு 1 அதற்குச் சூகாவியனான பில்தாது சொன்ன பதில்:
2 எப்பொழுது உமது சூழ்ச்சியுள்ள சொற்பொழிவை முடிக்கப் போகிறீர்? சிந்தித்திப் பாரும்; பின்னர் நாம் பேசுவோம்.
யோபு அதிகாரம் 18
3 மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன்? மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு?
4 சீற்றத்தில் உம்மையே நீர் கீறிக்கொள்வதனால், உம்பொருட்டு உலகம் கைவிடப்பட வேண்டுமா? பாறையும் தன் இடம்விட்டு நகர்த்தப்படவேண்டுமா?
யோபு அதிகாரம் 18
5 தீயவரின் ஒளி அணைந்துபோம்; அவர்களது தீக்கொழுந்து எரியாதுபோம். [* யோபு 21:17.. ]
6 அவர்களின் கூடாரத்தில் ஒளி இருளாகும்; அவர்கள்மீது ஒளிரும் விளக்கு அணைந்துபோம். [* யோபு 21:17.. ]
யோபு அதிகாரம் 18
7 அவர்களின் பீடுநடை தளர்ந்துபோம்; அவர்களின் திட்டமே அவர்களைக் கவிழ்க்கும்.
8 அவர்களின் கால்களே அவர்களை வலைக்குள் தள்ளும்; அவர்கள் நடப்பதோ கண்ணிகள் நடுவில்தான்.
யோபு அதிகாரம் 18
9 கண்ணி அவர்களின் குதிகாலைச் சிக்கிப்பிடிக்கும்; சுருக்கு அவர்களை மாட்டி இழுக்கும்.
10 மண்மீது அவர்களுக்குச் சுருக்கும், பாதையில் அவர்களுக்குப் பொறியும் மறைந்துள்ளன.
யோபு அதிகாரம் 18
11 எப்பக்கமும் திகில் அவர்களை நடுங்க வைக்கும்; கால் செல்லும் வழியில் துரத்தி விரட்டும்.
12 பட்டினி அவர்களின் வலிமையை விழுங்கிடும்; தீங்கு அவர்களின் வீழ்ச்சிக்குக் காத்திருக்கும்.
யோபு அதிகாரம் 18
13 நோய் அவர்களின் தோலைத் தின்னும்; சாவின் தலைப்பேறு அவர்களின் உறுப்புகளை விழுங்கும்.
14 அவர்கள் நம்பியிருந்த கூடாரத்தினின்று பிடுங்கப்படுவர்; அச்சம்தரும் அரசன்முன் கொணரப்படுவர்.
யோபு அதிகாரம் 18
15 அவர்களின் கூடாரங்களில் எதுவும் தங்காது; அவர்களின் உறைவிடங்களில் கந்தகம் தூவப்படுகின்றது.
16 கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்; மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம்.
யோபு அதிகாரம் 18
17 அவர்களின் நினைவே அவனியில் இல்லாதுபோம்; மண்ணின் முகத்தே அவனுக்குப் பெயரே இல்லாது போம்.
18 ஒளியிலிருந்து இருளுக்குள் அவர்கள் தள்ளப்படுவர்; உலகிலிருந்தே அவர்கள் துரத்தப்படுவர்.
யோபு அதிகாரம் 18
19 அவர்களின் இனத்தாரிடையே அவர்களுக்கு வழிமரபும் வழித்தோன்றலுமில்லை; அவர்கள் வாழ்ந்த இடத்தில் அவர்கள்வழி எஞ்சினோர் யாருமில்லை.
20 அவர்கள் கதி கண்டு திடுக்கிட்டது மேற்றிசை; திகிலுற்றது கீழ்த்திசை.
யோபு அதிகாரம் 18
21 கொடியவரின் குடியிருப்பெல்லாம் இத்தகையதே; இறைவனை அறியாதவரின் நிலையும் இதுவே.