Tamil சத்தியவேதம்

யோபு மொத்தம் 42 அதிகாரங்கள்

யோபு

யோபு அதிகாரம் 18
யோபு அதிகாரம் 18

தீயோரின் தவிர்க்க முடியாத முடிவு 1 அதற்குச் சூகாவியனான பில்தாது சொன்ன பதில்:

2 எப்பொழுது உமது சூழ்ச்சியுள்ள சொற்பொழிவை முடிக்கப் போகிறீர்? சிந்தித்திப் பாரும்; பின்னர் நாம் பேசுவோம்.

யோபு அதிகாரம் 18

3 மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன்? மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு?

4 சீற்றத்தில் உம்மையே நீர் கீறிக்கொள்வதனால், உம்பொருட்டு உலகம் கைவிடப்பட வேண்டுமா? பாறையும் தன் இடம்விட்டு நகர்த்தப்படவேண்டுமா?

யோபு அதிகாரம் 18

5 தீயவரின் ஒளி அணைந்துபோம்; அவர்களது தீக்கொழுந்து எரியாதுபோம். [* யோபு 21:17.. ]

6 அவர்களின் கூடாரத்தில் ஒளி இருளாகும்; அவர்கள்மீது ஒளிரும் விளக்கு அணைந்துபோம். [* யோபு 21:17.. ]

யோபு அதிகாரம் 18

7 அவர்களின் பீடுநடை தளர்ந்துபோம்; அவர்களின் திட்டமே அவர்களைக் கவிழ்க்கும்.

8 அவர்களின் கால்களே அவர்களை வலைக்குள் தள்ளும்; அவர்கள் நடப்பதோ கண்ணிகள் நடுவில்தான்.

யோபு அதிகாரம் 18

9 கண்ணி அவர்களின் குதிகாலைச் சிக்கிப்பிடிக்கும்; சுருக்கு அவர்களை மாட்டி இழுக்கும்.

10 மண்மீது அவர்களுக்குச் சுருக்கும், பாதையில் அவர்களுக்குப் பொறியும் மறைந்துள்ளன.

யோபு அதிகாரம் 18

11 எப்பக்கமும் திகில் அவர்களை நடுங்க வைக்கும்; கால் செல்லும் வழியில் துரத்தி விரட்டும்.

12 பட்டினி அவர்களின் வலிமையை விழுங்கிடும்; தீங்கு அவர்களின் வீழ்ச்சிக்குக் காத்திருக்கும்.

யோபு அதிகாரம் 18

13 நோய் அவர்களின் தோலைத் தின்னும்; சாவின் தலைப்பேறு அவர்களின் உறுப்புகளை விழுங்கும்.

14 அவர்கள் நம்பியிருந்த கூடாரத்தினின்று பிடுங்கப்படுவர்; அச்சம்தரும் அரசன்முன் கொணரப்படுவர்.

யோபு அதிகாரம் 18

15 அவர்களின் கூடாரங்களில் எதுவும் தங்காது; அவர்களின் உறைவிடங்களில் கந்தகம் தூவப்படுகின்றது.

16 கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்; மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம்.

யோபு அதிகாரம் 18

17 அவர்களின் நினைவே அவனியில் இல்லாதுபோம்; மண்ணின் முகத்தே அவனுக்குப் பெயரே இல்லாது போம்.

18 ஒளியிலிருந்து இருளுக்குள் அவர்கள் தள்ளப்படுவர்; உலகிலிருந்தே அவர்கள் துரத்தப்படுவர்.

யோபு அதிகாரம் 18

19 அவர்களின் இனத்தாரிடையே அவர்களுக்கு வழிமரபும் வழித்தோன்றலுமில்லை; அவர்கள் வாழ்ந்த இடத்தில் அவர்கள்வழி எஞ்சினோர் யாருமில்லை.

20 அவர்கள் கதி கண்டு திடுக்கிட்டது மேற்றிசை; திகிலுற்றது கீழ்த்திசை.

யோபு அதிகாரம் 18

21 கொடியவரின் குடியிருப்பெல்லாம் இத்தகையதே; இறைவனை அறியாதவரின் நிலையும் இதுவே.