• First page
  • Back
  • Next
  • last page
  • Zoom In
  • Zoom Out
  • Slide Show
  • Flip sound
  • Fullscreen
  • Thumbs

Tamil சத்தியவேதம்

யோபு மொத்தம் 42 அதிகாரங்கள்

யோபு

யோபு அதிகாரம் 12
யோபு அதிகாரம் 12

வலிமைமிகு செயல்களில் தெரியும் கடவுளின் ஞானம் 1 அதற்கு யோபு உரைத்த மறுமொழி:

2 உண்மையிலும் உண்மை; நீங்கள்தாம் எல்லாம் தெரிந்தவர்கள். உங்களோடு ஞானமும் ஒழிந்துவிடும்!

3 உங்களைப்போல அறிவு எனக்கும் உண்டு; உங்களுக்கு நான் தாழ்ந்தவன் அல்லன்; இத்தகையவற்றை யார்தான் அறியார்?

யோபு அதிகாரம் 12

4 கடவுளை மன்றாடி மறுமொழி பெற்ற நான், என் நண்பர்க்கு நகைப்புப் பொருள் ஆனேன். குற்றமற்ற நேர்மையாளனாகிய நான் நகைப்புப் பொருள் ஆனேன்.

5 இன்பத்தில் திளைத்திருக்கும் நீங்கள் என்னை ஏளனம் செய்கின்றீர்கள்; அடிசறுக்கிய என்னைத் தாக்குகின்றீர்கள்.

யோபு அதிகாரம் 12

6 கொள்ளையரின் கூடாரங்கள் கொழிக்கின்றன! இறைவனைச் சினந்தெழச் செய்வோரும் கடவுளுக்குச் சவால் விடுப்போரும் பாதுகாப்பாய் உள்ளனர்!

7 இருப்பினும், விலங்கிடம் வினவுக; உமக்கு அது கற்றுக்கொடுக்கும்; வானத்துப் பறவை உமக்கு அறிவுறுத்தும்.

யோபு அதிகாரம் 12

8 அல்லது மண்ணில் ஊர்வனவற்றிடம் பேசுக; அவை உமக்குக் கற்பிக்கும். ஆழியின் மீன்கள் உமக்கு அறிவிக்கும்.

9 இவற்றில் ஆண்டவரை அறியாதது எது? அவரது கைதான் இதைச் செய்தது என எது அறியாது?

யோபு அதிகாரம் 12

10 அவர் கையில்தான் அனைத்துப் படைப்புகளின் உயிரும் மனித இனத்தின் மூச்சும் உள்ளன. [* மனிதன் கருவாகி, தாய் வயிற்றில் வளரும் நிகழ்ச்சியை இவ்வசனம் வருணிக்கிறது.. ]

11 செவி, சொற்களைப் பிரித்து உணர்வதில்லையா? நாக்கு, உணவைச் சுவைத்து அறிவதில்லையா?

யோபு அதிகாரம் 12

12 முதியோரிடம் ஞானமுண்டு; ஆயுள் நீண்டோரிடம் அறிவுண்டு.

13 ஞானமும் வலிமையும் அவரிடமே உள்ளன! ஆலோசனையும் அறிவும் அவர்க்கே உரியன!

14 இதோ! அவர் இடித்திடுவதை எழுப்பிட இயலாது; அவர் அடைத்திடுபவரை விடுவித்திட முடியாது.

யோபு அதிகாரம் 12

15 இதோ; அவர் மழையைத் தடுப்பாரெனில், அனைத்தும் வறண்டுபோம்; வெளியே அதை வரவிடுவாரெனில், நிலத்தையே மூழ்கடிக்கும்.

16 வல்லமையும் மதிநுட்பமும் அவருக்கே உரியன; ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும் அவருடையோரே!

யோபு அதிகாரம் 12

17 அமைச்சர்களை அறிவிழக்கச் செய்கின்றார்; நடுவர்களை மடையர்கள் ஆக்குகின்றார்.

18 அரசர்களின் அரைக்கச்சையை அவிழ்க்கின்றார்; அவர்களின் இடையில் கந்தையைக் கட்டுகின்றார்;

யோபு அதிகாரம் 12

19 குருக்களைத் தம் நிலையிலிருந்து விழச் செய்கின்றார்; நிலைபெற்ற வலியோரைக் கவிழ்த்து வீழ்த்துகின்றார்;

20 வாய்மையாளரின் வாயை அடைக்கின்றார்; முதியோரின் பகுத்துணர் மதியைப் பறிக்கின்றார்;

யோபு அதிகாரம் 12

21 உயர்குடி மக்கள் மீது வெறுப்பினைப் பொழிகின்றார்; வலியோரின் கச்சை கழன்றுபோகச் செய்கின்றார்;

22 புரியாப் புதிர்களை இருளினின்று இலங்கச் செய்கின்றார் . காரிருளை ஒளிக்குக் கடத்திவருகின்றார்.

யோபு அதிகாரம் 12

23 மக்களினங்களைப் பெருகச் செய்கின்றார்; பின்பு அழிக்கின்றார்; மக்களினங்களைப் பரவச் செய்கின்றார்; பின், குறையச் செய்கின்றார்.

24 மண்ணக மக்களின் தலைவர் தம் அறிவாற்றலை அழிக்கின்றார். வழியிலாப் பாழ்வெளியில் அவர்களை அலையச் செய்கின்றார்.

யோபு அதிகாரம் 12

25 இருளில் ஒளியிலாது தடவுகின்றார்கள்; குடித்தவர்போல் அவர்களைத் தடுமாற வைக்கின்றார்.