Tamil சத்தியவேதம்

யோபு மொத்தம் 42 அதிகாரங்கள்

யோபு

யோபு அதிகாரம் 11
யோபு அதிகாரம் 11

கடவுளின் ஞானத்தை ஏற்றுக்கொள்ள யோபு தூண்டப்படல் 1 அதற்கு நாமாவியனான சோப்பார் சொன்ன மறுமொழி:

2 திரளான சொற்கள் பதிலின்றிப் போகலாமா? மிகுதியாகப் பேசுவதால், ஒருவர் நேர்மையாளர் ஆகிவிடுவாரோ?

யோபு அதிகாரம் 11

3 உம் வீண் வார்த்தைகள் மனிதரை வாயடைத்திடுமோ? நீர் நகையாடும் போது உம்மை யாரும் நையாண்டி செய்யாரோ?

4 “என் அறிவுரை தூயது; நானும் என் கண்களுக்கு மாசற்றவன்” என்கின்றீர்.

5 ஆனால், “கடவுளே பேசட்டும்; தம் இதழ்களை உமக்கெதிராயத் திறக்கட்டும்” என யாரேனும் அவரை வேண்டாரோ!

யோபு அதிகாரம் 11

6 அவரே ஞானத்தின் மறைபொருளை உமக்கு அறிவிக்கட்டும்; அவர் இரட்டிப்பான அறிவும் திறனுமுடையவர்; கடவுள் உம் தீமைகளில் சிலவற்றை மறந்தார் என்பதை அறிக!

7 கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை நீர் அறிய முடியுமா? எல்லாம் வல்லவரின் எல்லையைக் கண்டுணர முடியுமா?

யோபு அதிகாரம் 11

8 அவை வானங்களை விட உயர்ந்தவை; நீர் என்ன செய்வீர்? அவை பாதாளத்தைவிட ஆழமானவை; நீர் என்ன அறிவீர்?

9 அதன் அளவு பாருலகைவிடப் பரந்தது; ஆழ்கடலைவிட அகலமானது.

யோபு அதிகாரம் 11

10 அவர் இழுத்து வந்து அடைத்துப் போட்டாலும், அவைமுன் நிறுத்தினாலும் அவரைத் தடுப்பார் யார்? [* மனிதன் கருவாகி, தாய் வயிற்றில் வளரும் நிகழ்ச்சியை இவ்வசனம் வருணிக்கிறது.. ]

11 ஏனெனில், அவர் மனிதரின் ஒன்றுமில்லாமையை அறிவார்; தீமையைக் காண்கின்றார்; ஆனால், அதை ஒருபொருட்டாகக் கருதுவதில்லை.

யோபு அதிகாரம் 11

12 காட்டுக்கழுதைக்குட்டி மனிதனாகப் பிறந்தால், அறிவிலியும் அறிவு பெறுவான்.

13 உம்முடைய உள்ளத்தை நீர் ஒழுங்குபடுத்தினால், உம்முடைய கைகளை அவரை நோக்கி நீட்டுவீராக!

யோபு அதிகாரம் 11

14 உம் கையில் கறையிருக்குமாயின் அப்புறப்படுத்தும்; உம் கூடாரத்தில் தீமை குடிகொள்ளாதிருக்கட்டும்.

15 அப்போது உண்மையாகவே நாணமின்றி உம் முகத்தை ஏறெடுப்பீர்; நிலைநிறுத்தப்படுவீர்; அஞ்சமாட்டீர்.

யோபு அதிகாரம் 11

16 உம் துயரை நீர் மறந்துபோவீர்; கடந்துபோன வெள்ளம்போல் அதை நினைகூர்வீர்.

17 உம் வாழ்வுக்காலம் நண்பகலைவிட ஒளிரும்; காரிருளால் மூடப்பட்டிருந்தாலும் காலைபோல் ஆவீர்;

யோபு அதிகாரம் 11

18 நம்பிக்கை இருப்பதனால் உறுதிகொள்வீர்; சுற்றிலும் நோக்கிப் பாதுகாப்பில் ஓய்வீர்;

19 ஓய்ந்து படுப்பீர்; ஒருவரும் உம்மை அச்சுறுத்தார்; உம் முகம்தேடிப் பலர் உம் தயவை நாடுவர்;

20 தீயோரின் கண்கள் மங்கிப்போம்; அனைத்துப் புகலிடமும் அவர்க்கு அழிந்துபோம்; உயிர்பிரிதலே அவர்தம் நம்பிக்கை!