Tamil சத்தியவேதம்
ஓசியா மொத்தம் 14 அதிகாரங்கள்
ஓசியா அதிகாரம் 4
இஸ்ரயேலுக்கு எதிரான குற்றச்சாட்டு 1 இஸ்ரயேல் மக்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; நாட்டில் குடியிருப்பவர்களோடு ஆண்டவருக்கு வழக்கு ஒன்று உண்டு; நாட்டில் உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; கடவுளை அறியும் அறிவும் இல்லை.
ஓசியா அதிகாரம் 4
2 பொய்யாணை, பொய்யுரை, கொலை, களவு, விபசாரம் ஆகியன பெருகிவிட்டன. எல்லாக் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிகின்றனர்; இரத்தப் பழிமேல் இரத்தப்பழி குவிகின்றது.
3 ஆதலால் நாடு புலம்புகின்றது; அதில் குடியிருப்பன எல்லாம் நலிந்து போகின்றன; காட்டு விலங்குகளும், வானத்துப் பறவைகளும், கடல்வாழ் மீன்களும்கூட அழிந்து போகின்றன.
ஓசியா அதிகாரம் 4
4 ஆயினும் எவனும் வழக்காட வேண்டாம்; எவனும் குற்றம் சாட்ட வேண்டாம்; *உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள்.* [* "உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள்" என்பது "குருவே, உன்னோடு தான் என் வழக்கு" எனவும் பொருள்படும்.. ]
ஓசியா அதிகாரம் 4
5 பகலிலே நீ இடறி விழுவாய்; இரவிலே இறைவாக்கினனும் உன்னோடு இடறி விழுவான்; உன் தாயை நான் அழித்துவிடுவேன்.
6 அறிவின்மையால் என் மக்கள் அழிகின்றார்கள்; நீ அறிவைப் புறக்கணித்தாய்; நானும் நீ எனக்குக் குருவாய் இராதபடி உன்னை புறக்கணிப்பேன். நீ உன் கடவுளின் திருச்சட்டத்தை மறந்துவிட்டாய்; நானும் உன் மக்களை மறந்து விடுவேன்.
ஓசியா அதிகாரம் 4
7 எவ்வளவுக்கு அவர்கள் பலுகினார்களோ அவ்வளவுக்கு அவர்கள் எனக்கு எதிராயப் பாவம் செய்தார்கள்; அவர்கள் மேன்மையை இகழ்ச்சியாக மாற்றுவேன்.
8 என் மக்களின் பாவங்களால் இவர்கள் வயிறு வளர்க்கின்றார்கள்; அவர்கள் தீச்செயல் செய்யும்படி இவர்கள் ஏங்குகின்றார்கள்.
ஓசியா அதிகாரம் 4
9 குருவுக்கு நேரிடுவது மக்களுக்கும் நேரிடும்; அவர்களுடைய தீய வழிகளுக்காகத் தண்டனை வழங்குவேன்; அவர்களுடைய செயல்களுக்கேற்ற பதிலை அளிப்பேன்.
10 அவர்கள் உண்டாலும் நிறைவடைய மாட்டார்கள்; வேசித்தனம் செய்தாலும் பலுகமாட்டார்கள்; ஏனெனில், வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காக ஆண்டவரைக் கைவிட்டார்கள்.
ஓசியா அதிகாரம் 4
இஸ்ரயேலில் சிலைவழிபாடும் குடிவெறியும் 11 மதுவும், திராட்சை இரசமும் அறிவைக் கெடுக்கும்.
12 என் மக்கள் மரக்கட்டையிடம் குறி கேட்கின்றனர்; அவர்களது கோல் மறைமொழிகள் கூறுகின்றது! விபசாரப் புத்தி அவர்களை நெறிதவறச் செய்தது; விபசாரம் செய்வதற்காக அவர்கள் தங்கள் கடவுளைவிட்டு அகன்றனர்.
ஓசியா அதிகாரம் 4
13 மலையுச்சிகளில் அவர்கள் பலியிடுகின்றார்கள்; குன்றுகள் மேலும், நல்ல நிழல் தரும் கருவாலி, புன்னை, தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் நறுமணப் புகை எழுப்புகின்றார்கள்; ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கின்றார்கள்; உங்கள் மருமக்கள் விபசாரம் புரிகின்றார்கள்.
ஓசியா அதிகாரம் 4
14 உங்கள் புதல்வியர் விபசாரம் செய்தாலும், உங்கள் மருமக்கள் விபசாரம் புரிந்தாலும், நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன்; ஏனெனில், ஆண்கள் விலைமாதரோடு போகின்றார்கள்; தேவதாசிகளோடு சேர்ந்து பலி செலுத்துகின்றார்கள்; அறிவற்ற அம்மக்கள் அழிந்து போவார்கள்.
ஓசியா அதிகாரம் 4
யூதாவுக்கு எச்சரிக்கை 15 இஸ்ரயேல், நீ வேசித்தனம் புரிந்தாலும், யூதா நாடாகிலும் குற்றமற்றதாய் இருக்கட்டும்; கில்காலுக்குள் நுழையாதீர்கள்; பெத்தாவேனுக்குப் போகாதீர்கள்; “ஆண்டவர்மேல் ஆணை” என்று ஆணையிடாதீர்கள்.
ஓசியா அதிகாரம் 4
16 கட்டுக்கடங்காத இளம் பசுவைப் போல இஸ்ரயேல் மக்கள் பிடிவாதமாயிருக்கின்றார்கள்; ஆண்டவர் அவர்களைப் பரந்த புல்வெளியில் ஆட்டுக் குட்டியைப் போல் மேய்க்க முடியுமா?
ஓசியா அதிகாரம் 4
17 எப்ராயிம் சிலைகளோடு சேர்ந்து கொண்டான். அவனை விட்டுவிடு.
18 குடிவெறியர் கூட்டமாகிய அவர்கள் வேசித்தனத்தில் ஆழ்ந்திருக்கின்றார்கள்; தங்களது மேன்மையைக் காட்டிலும் இகழ்ச்சியையே அவர்கள் மிகுதியாய் விரும்புகின்றார்கள்.
ஓசியா அதிகாரம் 4
19 காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் பற்றிக் கொள்ளும்; அவர்கள் தங்கள் பலிகளால் நாணமடைவார்கள்.